உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

Oct 07, 2025,04:17 PM IST

சென்னை : கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜய் வீடியோ காலில் பேசி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருவதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


2026ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையிலும் தலா 2 மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக தவெக தலைவர் விஜய் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி திருச்சியில் செப்டம்பர் 13ம் தேதி தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்கினார் விஜய். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்த விஜய், செப்டம்பர் 27ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கரூர் சென்றார். 


கரூர் வேலுச்சாமிபுரத்தில் போலீசார் அனுமதித்த இடத்தில் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவிலான மக்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர்கள். பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தவெக கட்சியை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 




கரூர் சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மற்றொரு புறம் பலரும் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டு வருகிறார்கள். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அவரது கட்சியினரோ நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறவில்லை என பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.


இந்நிலையில் விஜய்யின் அடுத்த கட்ட செயல்பாடு குறித்து தவெக.,வினரிடம் விசாரித்த போது, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுடன் வீடியோ காலில் பேசி, விஜய் ஆறுதல் தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. உங்களுடன், உங்களுக்காக நான் இருக்கிறேன் என ஆறுதல் கூறி வருகிறாராம். இதுவரை 4 முதல் 5 குடும்பத்தினருடன் விஜய் பேசி உள்ளாராம். தவெக கட்சி சார்பில் நிர்வாகிகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து, விஜய் ஏற்கனவே அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்