உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

Oct 07, 2025,04:17 PM IST

சென்னை : கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜய் வீடியோ காலில் பேசி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருவதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


2026ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையிலும் தலா 2 மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக தவெக தலைவர் விஜய் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி திருச்சியில் செப்டம்பர் 13ம் தேதி தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்கினார் விஜய். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்த விஜய், செப்டம்பர் 27ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கரூர் சென்றார். 


கரூர் வேலுச்சாமிபுரத்தில் போலீசார் அனுமதித்த இடத்தில் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவிலான மக்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர்கள். பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தவெக கட்சியை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 




கரூர் சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மற்றொரு புறம் பலரும் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டு வருகிறார்கள். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அவரது கட்சியினரோ நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறவில்லை என பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.


இந்நிலையில் விஜய்யின் அடுத்த கட்ட செயல்பாடு குறித்து தவெக.,வினரிடம் விசாரித்த போது, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுடன் வீடியோ காலில் பேசி, விஜய் ஆறுதல் தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. உங்களுடன், உங்களுக்காக நான் இருக்கிறேன் என ஆறுதல் கூறி வருகிறாராம். இதுவரை 4 முதல் 5 குடும்பத்தினருடன் விஜய் பேசி உள்ளாராம். தவெக கட்சி சார்பில் நிர்வாகிகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து, விஜய் ஏற்கனவே அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?

news

கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்

news

கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!

news

பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி

news

யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!

news

ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்