இருமல் மருந்தைத் தொடர்ந்து .. ம.பியில் மீண்டும் பரபரப்பு.. ஆன்டிபயாடிக் மருந்தில் நெளிந்த புழுக்கள்

Oct 18, 2025,06:27 PM IST

குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்தைக் குடித்து 25 குழந்தைகள் பலியான பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், குழந்தைக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் நெளிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் விஷத்தன்மை கொண்ட இருமல் மருந்து காரணமாக 25 குழந்தைகள் இறந்ததாக ஒரு விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த செய்தி வந்துள்ளது. குவாலியரின் மொரார் நகரில் ஒரு பெண், அசித்ரோமைசின் ஆன்டிபயாடிக் வாய்வழி திரவ மருந்து பாட்டிலில் புழுக்கள் இருந்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து, அந்த மருந்து இருந்த முழு சரக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 




மத்திய பிரதேச மருந்து ஆய்வாளர் இதுகுறித்துக் கூறுகையில், சில பாட்டில்களின் ஆரம்பகட்ட ஆய்வில் எந்தவிதமான பூச்சிகளும் தென்படவில்லை என்றாலும், கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய சோதனை அவசியம். அசித்ரோமைசின் வாய்வழி திரவம் குழந்தைகளுக்கு பொதுவாக தொற்றுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட மருந்து பாட்ச் மத்திய பிரதேசத்தை தளமாகக் கொண்ட ஒரு மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது.


ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்துதான் ம.பியில் 25 குழந்தைகள் இறந்தனர். இதுதொடர்பாக அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அசித்ரோமைசின் என்பது குழந்தைகளுக்கு காது, மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் போன்ற பல்வேறு லேசான மற்றும் மிதமான பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவர்கள் குழந்தையின் எடை மற்றும் சிகிச்சையளிக்கப்படும் குறிப்பிட்ட தொற்றின் அடிப்படையில் மருந்தின் அளவை பரிந்துரைக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்