இருமல் மருந்தைத் தொடர்ந்து .. ம.பியில் மீண்டும் பரபரப்பு.. ஆன்டிபயாடிக் மருந்தில் நெளிந்த புழுக்கள்

Oct 18, 2025,06:27 PM IST

குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்தைக் குடித்து 25 குழந்தைகள் பலியான பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், குழந்தைக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் நெளிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் விஷத்தன்மை கொண்ட இருமல் மருந்து காரணமாக 25 குழந்தைகள் இறந்ததாக ஒரு விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த செய்தி வந்துள்ளது. குவாலியரின் மொரார் நகரில் ஒரு பெண், அசித்ரோமைசின் ஆன்டிபயாடிக் வாய்வழி திரவ மருந்து பாட்டிலில் புழுக்கள் இருந்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து, அந்த மருந்து இருந்த முழு சரக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 




மத்திய பிரதேச மருந்து ஆய்வாளர் இதுகுறித்துக் கூறுகையில், சில பாட்டில்களின் ஆரம்பகட்ட ஆய்வில் எந்தவிதமான பூச்சிகளும் தென்படவில்லை என்றாலும், கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய சோதனை அவசியம். அசித்ரோமைசின் வாய்வழி திரவம் குழந்தைகளுக்கு பொதுவாக தொற்றுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட மருந்து பாட்ச் மத்திய பிரதேசத்தை தளமாகக் கொண்ட ஒரு மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது.


ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்துதான் ம.பியில் 25 குழந்தைகள் இறந்தனர். இதுதொடர்பாக அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அசித்ரோமைசின் என்பது குழந்தைகளுக்கு காது, மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் போன்ற பல்வேறு லேசான மற்றும் மிதமான பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவர்கள் குழந்தையின் எடை மற்றும் சிகிச்சையளிக்கப்படும் குறிப்பிட்ட தொற்றின் அடிப்படையில் மருந்தின் அளவை பரிந்துரைக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இவர்கள் பிரிந்து விட மாட்டார்களா என ஏங்கிய எதிரிகளின் கனவு தூளானது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

news

நிதீஷ் குமார் நிலை இபிஎஸ்-க்கு வந்து விடக் கூடாது... மாணிக்கம் தாகூர் அக்கறை

news

Nitish Kumar: பாஜக.,வேலையே இது தான்...நான் அப்பவே சொன்னேன்...தேஜஸ்வி ஆதங்கம்

news

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் கோலாகலம்: பிரபலங்கள் பங்கேற்பு!

news

தமிழகத்திலும் பீகார் பார்முலா... பாஜக மீது விசிக வன்னி அரசு விமர்சனம்

news

தவெக.விற்கு வரலாம்.. டி. ஜெயகுமாருக்கு கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு

news

சீட்டுகளும் நோட்டுகளும் சிக்கல்கள் போக்கும் கொள்கையும் கோட்பாடும் என்னவென்று கேட்கும்!

news

முடிவான திமுக-காங்கிரஸ் கூட்டணி...ஏமாற்றத்தில் தவெக...அடுத்து என்ன செய்ய போகிறார் விஜய்?

அதிகம் பார்க்கும் செய்திகள்