இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் கக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பலுசிஸ்தானைச் சேர்ந்த எம்.பி. ஆவார்.
இதுகுறித்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பதவி விலகும் பிரதமர் சபாஸ் ஷெரீப்பும், எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் அகமதுவும் இணைந்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் இறுதியில் கக்கர் இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பிரதமராக இருப்பார் கக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி தாமதமாகும் என்பதால் தேர்தல் நடத்துவதும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கக்கர் பலுசிஸ்தான் அவாமி கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 6 வருடமாக பாகிஸ்தான் மேல்சபை உறுப்பினராக கக்கர் இருந்து வருகிறார்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}