இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் கக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பலுசிஸ்தானைச் சேர்ந்த எம்.பி. ஆவார்.
இதுகுறித்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பதவி விலகும் பிரதமர் சபாஸ் ஷெரீப்பும், எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் அகமதுவும் இணைந்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் இறுதியில் கக்கர் இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பிரதமராக இருப்பார் கக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி தாமதமாகும் என்பதால் தேர்தல் நடத்துவதும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கக்கர் பலுசிஸ்தான் அவாமி கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 6 வருடமாக பாகிஸ்தான் மேல்சபை உறுப்பினராக கக்கர் இருந்து வருகிறார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}