இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் கக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பலுசிஸ்தானைச் சேர்ந்த எம்.பி. ஆவார்.
இதுகுறித்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பதவி விலகும் பிரதமர் சபாஸ் ஷெரீப்பும், எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் அகமதுவும் இணைந்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் இறுதியில் கக்கர் இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பிரதமராக இருப்பார் கக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி தாமதமாகும் என்பதால் தேர்தல் நடத்துவதும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கக்கர் பலுசிஸ்தான் அவாமி கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 6 வருடமாக பாகிஸ்தான் மேல்சபை உறுப்பினராக கக்கர் இருந்து வருகிறார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}