அரங்கனின் பிரியாவிடை...!

Apr 03, 2026,11:52 AM IST

- பா.பானுமதி


பிரியமான அரங்கனே

பிரிந்து செல்வாயா 

பிரியம் பொழிவேன் அரங்கா 

பிணைத்துக் கொள்வாயா 


விட்டு செல்வதில் விருப்பம் கொள்ளாதே 

விடை கொடுப்பதில் வேகம் காட்டாதே 

பெரிய பிராட்டி என்னை பிரியலாமா 

கமலவல்லி நினைவால் என்னை கைவிடலாமா 


பூதேவிக்காக என்னை புண்ணாக்கலாமா 

ஸ்ரீதேவிக்காக என்னை சிதைக்கலாமா 

துலுக்க நாச்சிக்காக என் தூக்கத்தை கெடுக்கலாமா 

ஆண்டாளின் பாசுரத்திற்காக என்னை அழ விடலாமா 




படி தாண்டாமல் உன் பாசத்திற்காக தவிக்கிறேன் 

உன் அருகாமையில் மட்டுமே ஆனந்தத்தில் களிக்கிறேன்

வழிமேல் விழி வைத்து வரவேற்க காத்திருக்கிறேன்  

வந்த உடனே இப்படி திரும்பி வருத்தப்படுத்தலாமா  


ஆட்டிப் படைக்கும் அரங்கா 

உன் அருகாமை வேண்டும் 

பிரியா விடை கேட்காமல் 

என்னை பிணையும் நிலை வேண்டும்

அரங்கா என்னையும் உன் அடியாராக ஏற்றுக்கொள் 

அப்படியாவது உன் அருகாமை எனக்கு கிடைக்கட்டும் 


இப்படிக்கு 

ரங்கநாயகி தாயார்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்

news

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!

news

'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!

news

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

news

எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்

news

சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!

news

கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்

news

குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்