அரங்கனின் பிரியாவிடை...!

Apr 03, 2026,11:52 AM IST

- பா.பானுமதி


பிரியமான அரங்கனே

பிரிந்து செல்வாயா 

பிரியம் பொழிவேன் அரங்கா 

பிணைத்துக் கொள்வாயா 


விட்டு செல்வதில் விருப்பம் கொள்ளாதே 

விடை கொடுப்பதில் வேகம் காட்டாதே 

பெரிய பிராட்டி என்னை பிரியலாமா 

கமலவல்லி நினைவால் என்னை கைவிடலாமா 


பூதேவிக்காக என்னை புண்ணாக்கலாமா 

ஸ்ரீதேவிக்காக என்னை சிதைக்கலாமா 

துலுக்க நாச்சிக்காக என் தூக்கத்தை கெடுக்கலாமா 

ஆண்டாளின் பாசுரத்திற்காக என்னை அழ விடலாமா 




படி தாண்டாமல் உன் பாசத்திற்காக தவிக்கிறேன் 

உன் அருகாமையில் மட்டுமே ஆனந்தத்தில் களிக்கிறேன்

வழிமேல் விழி வைத்து வரவேற்க காத்திருக்கிறேன்  

வந்த உடனே இப்படி திரும்பி வருத்தப்படுத்தலாமா  


ஆட்டிப் படைக்கும் அரங்கா 

உன் அருகாமை வேண்டும் 

பிரியா விடை கேட்காமல் 

என்னை பிணையும் நிலை வேண்டும்

அரங்கா என்னையும் உன் அடியாராக ஏற்றுக்கொள் 

அப்படியாவது உன் அருகாமை எனக்கு கிடைக்கட்டும் 


இப்படிக்கு 

ரங்கநாயகி தாயார்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

news

தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

news

மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

news

Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

news

Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்