டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு, மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய 8வது சம்மனுக்கு பதிலளித்து இவ்வாறு தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.

மது விலக்குக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் கூட கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில் 8வது சம்மனுக்கு கெஜ்ரிவால் பதில் அனுப்பியுள்ளார். அதில், விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி சம்மன் அனுப்புவது சட்டவிரோதமானது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கு முடியும் வரை அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும்.
அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானது என்றாலும் கூட நான் விசாரணைக்கு ஆஜராக தயாராகவே இருக்கிறேன். மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராக நான் தயார் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் தவிர்த்து வருவதை எதிர்த்து டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து வழக்கில் மார்ச் 16ம் தேதி கெஜ்ரிவால் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அன்றைய தினம் கெஜ்ரிவால் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}