வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகிறேன்.. அதுவும் மார்ச் 12க்குப் பிறகுதான்.. ED க்கு கெஜ்ரிவால் பதில்

Mar 04, 2024,06:13 PM IST

டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு, மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய 8வது சம்மனுக்கு பதிலளித்து இவ்வாறு தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.




மது விலக்குக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் கூட கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில் 8வது சம்மனுக்கு கெஜ்ரிவால் பதில் அனுப்பியுள்ளார். அதில், விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி சம்மன் அனுப்புவது சட்டவிரோதமானது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கு முடியும் வரை அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும்.


அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானது என்றாலும் கூட நான் விசாரணைக்கு ஆஜராக தயாராகவே இருக்கிறேன். மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராக நான் தயார் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் தவிர்த்து வருவதை எதிர்த்து டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து வழக்கில் மார்ச் 16ம் தேதி கெஜ்ரிவால் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அன்றைய தினம் கெஜ்ரிவால் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

“நான் இருக்கேன்” ... மனிதம் மலர்கையில் – (பகுதி 5)

news

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு

news

ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்