டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு, மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய 8வது சம்மனுக்கு பதிலளித்து இவ்வாறு தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.

மது விலக்குக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் கூட கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில் 8வது சம்மனுக்கு கெஜ்ரிவால் பதில் அனுப்பியுள்ளார். அதில், விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி சம்மன் அனுப்புவது சட்டவிரோதமானது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கு முடியும் வரை அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும்.
அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானது என்றாலும் கூட நான் விசாரணைக்கு ஆஜராக தயாராகவே இருக்கிறேன். மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராக நான் தயார் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் தவிர்த்து வருவதை எதிர்த்து டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து வழக்கில் மார்ச் 16ம் தேதி கெஜ்ரிவால் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அன்றைய தினம் கெஜ்ரிவால் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}