இஸ்லாமாபாத் : ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் பாகிஸ்தானில் இன்று துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
இதில் ஏ குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் உள்ளன. அதேபோல பி குரூப்பில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை குரூப் பிரிவு போட்டிகள் நடைபெறும். இதில் இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும். இந்தியாவின் முதல் போட்டி செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரானதாகும். கண்டியில் இப்போட்டி நடைபெறவுள்ளது. 2வது போட்டி நேபாளத்துடன் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும்.
தொடக்கப் போட்டிகளைத் தொடர்ந்து சூப்பர் 4 ஸ்டேஜ் போட்டிகள் செப்டம்பர் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும்.
இன்று துவங்கும் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. மாலை 3 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
{{comments.comment}}