22 முதல் 30 வயதுக்குள் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.. அஸ்ஸாம் முதல்வர் சொல்கிறார்!

Jan 28, 2023,02:43 PM IST
குவஹாத்தி:  பெண்கள், 22 முதல் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.



குவஹாத்தியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் பெண்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசினார் சர்மா. அவரது பேச்சிலிருந்து சில:

பெண்கள் பொருத்தமான வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதன் மூலம் மருத்துவ சிக்கல்களைத் தவிர்க்க முடியும். சிறார் திருமணங்களையும், மிகவும் இளம் வயது தாய்மையையும் தடுக்க எனது அரசு உறுதியுடன் உள்ளது.

போக்சோ சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்கள் சிறைக்கு போகப் போகிறார்கள். 14 வயதுக்குட்பட்டோரை திருமணம் செய்து கொள்வதும் குற்றமாகும். 18 வயதுதான் ஒரு பெண்ணுக்குத் திருமண வயது. அதற்கு கீழே உள்ள பெண்ணைக் கல்யாணம் செய்தால் சிறைக்குத்தான் போக வேண்டும்.

பெண்கள் தாய்மை அடைவதற்கு நீண்ட காலம் காத்திருக்கக் கூடாது. மருத்துவ சிக்கல்கள் ஏற்படும். 22 முதல் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வதே சிறந்தது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்