22 முதல் 30 வயதுக்குள் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.. அஸ்ஸாம் முதல்வர் சொல்கிறார்!

Jan 28, 2023,02:43 PM IST
குவஹாத்தி:  பெண்கள், 22 முதல் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.



குவஹாத்தியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் பெண்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசினார் சர்மா. அவரது பேச்சிலிருந்து சில:

பெண்கள் பொருத்தமான வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதன் மூலம் மருத்துவ சிக்கல்களைத் தவிர்க்க முடியும். சிறார் திருமணங்களையும், மிகவும் இளம் வயது தாய்மையையும் தடுக்க எனது அரசு உறுதியுடன் உள்ளது.

போக்சோ சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்கள் சிறைக்கு போகப் போகிறார்கள். 14 வயதுக்குட்பட்டோரை திருமணம் செய்து கொள்வதும் குற்றமாகும். 18 வயதுதான் ஒரு பெண்ணுக்குத் திருமண வயது. அதற்கு கீழே உள்ள பெண்ணைக் கல்யாணம் செய்தால் சிறைக்குத்தான் போக வேண்டும்.

பெண்கள் தாய்மை அடைவதற்கு நீண்ட காலம் காத்திருக்கக் கூடாது. மருத்துவ சிக்கல்கள் ஏற்படும். 22 முதல் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வதே சிறந்தது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்