அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த இந்தியாவை, ஆஸ்திரேலியா அணி சந்திக்கிறது.
உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமாக போற்றப்படும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நவம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்தப் போட்டியைக் காண குவியவுள்ளனர்.
இந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதிப் போட்டி வரை வந்துள்ளது இந்தியா. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மறுபக்கம் முதல் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்த ஆஸ்திரேலியா 2வது அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இப்போது இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் தோற்றதற்கு இந்தியாவை பழி தீர்த்து கோப்பையை வெல்லுமா ஆஸ்திரேலியா அல்லது.. ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து இந்தியா தனது 3வது ஒரு நால் உலகக் கோப்பையை தட்டிச் செல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.
3வது கோப்பை இந்தியாவுக்குக் கிடைக்குமா?
இந்தியாவைப் பொறுத்தவரை கபில் தேவ் தலைமையில் முதல் உலகக் கோப்பை கிடைத்தது. 2வது உலகக் கோப்பை தோனி தலைமையிலான இந்திய அணிக்குக் கிடைத்தது. இப்போதைய கோப்பையை இந்தியா வென்றால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்குப் புதிய பெருமை கிடைக்கும்.
மறுபக்கம் ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 8 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 4 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று 2 முறை கோப்பையை வென்றுள்ளது.
நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாபெரும் சண்டை காத்திருக்கிறது.. பார்க்கலாம்.. வெல்லப் போவது இந்தியாவின் சார்பட்டா பரம்பரையா அல்லது ஆஸ்திரேலியாவின் கங்காரு பரம்பரையா!
தீவிரவாதத்தை கைவிட்டால் பாகிஸ்தான் பிழைக்கும்.. இல்லாவிட்டால்.. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி பேச்சு
மக்களே என்ஜாய்..தமிழ்நாட்டில் இன்றும், 14, 15 ,16, தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!
Heart Breaking News: விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு!
விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாமல் இங்கிலாந்து போகும் இந்திய அணி.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?
Madurai Chithirai Thiruvizha: பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
கோவையில் நடைபெற இருந்த.. இசைஞானி இளையராஜா இசை கச்சேரி..மே 31 தேதிக்கு ஒத்திவைப்பு..!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு புதிய சிக்கல்.. படத்திற்கு தடை கோரி பாஜக வழக்கு..!
அடிக்குது வெயிலு.. கோடைக் கொடுமையை சமாளிக்க.. சூப்பரான நுங்கு.. ஜில் ஜில் நன்மைகள்!
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்... சவரனுக்கு ரூ.1320 குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!