- பா.பானுமதி
கோவிலில் கண்டதும் எனை
கொக்கி போட்டு இழுத்தவள்
வாயிலில் நின்று வசீகரித்து சென்றவள்
வங்கியில் கண்டபோது வளைத்துப் போட்டவள்
நெஞ்சில் தங்கி இளைக்கச் செய்தவள்
திருவிழாவில் இருந்து திருடி போனவள்
தினம் விழா வாக்கி வருடி சென்றவள்
தொலைவில் இருந்தும் என்னை துளைத்து போட்டவள்
அருகில் இருந்து என்னை அசைத்து விட்டவள்
பொது இடத்தில் பொறுமை இழக்க செய்தவள்
தனிமையில் இருக்கையில் தள்ளாட விட்டவள்
அன்று ஒரு நாள் என்னை அள்ளிச் சென்றவள்
பிறிது ஒரு நாள் என்னை பிரித்துப் போட்டவள்
கண்ட நாள் முதல் என் கண்ணில் கலந்து விட்டவள்

இந்த நாள் வரை இதயத்தில் வாழ்ந்து வருபவள்
அழகின் வடிவாய் அசைந்து வருபவள்
அமைதியின் இலக்கணத்தை இசைத்துக் கொண்டிருப்பவள்
காண்பவரை எல்லாம் கட்டி போடுபவள்
உள்ளிருந்து என்னில் உறவாடிக் கொண்டிருப்பவள்
இன்று கண்முன்னே நடமாடிக் கொண்டிருப்பவள்
அவளா இவள்
இதயத்தில் இருந்து இமை வழியில் வெளிவந்து விட்டாளா
தேடுதல் தெரிந்து என்னை திருப்திபடுத்த வந்து விட்டாளா...
உயிர் காக்கும் அமுதமா உணர்வில் பொங்கும் குமுதமா....!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!
South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை
Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்
தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?
மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"
Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!
Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!
{{comments.comment}}