மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Jan 13, 2025,08:12 PM IST

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைக்கும், வீரருக்கும் சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்  அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த போட்டிகளைக்கான வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள். நாளை  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


அதன்படி, பொங்கல் தினமான நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக, வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடங்கள், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 1,100காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.


வீரரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள்




போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் காளைகள் காலை 6 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு (அதாவது அதிக காளைகளைப் பிடிப்பவருக்கு) முதலமைச்சர் சார்பாக ரூ.8.50 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது மட்டும் இன்றி இந்தாண்டு நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெற்றி பெறும் காளையின் உரிமையாளருக்கு (அதாவது பிடிமாடாகமல் வெல்லும் காளையின் உரிமையாளருக்கு) முதல் முறையாக முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!

news

முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?

news

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்

news

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?

news

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை

news

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!

news

விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!

news

சிந்தனைச் சிதறல்.. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்.. கிடைத்தால் விடாதீர்கள்

news

மனிதனின் இரு பக்கங்கள்: பலமும் பலவீனமும்

அதிகம் பார்க்கும் செய்திகள்