மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Jan 13, 2025,08:12 PM IST

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைக்கும், வீரருக்கும் சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்  அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த போட்டிகளைக்கான வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள். நாளை  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


அதன்படி, பொங்கல் தினமான நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக, வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடங்கள், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 1,100காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.


வீரரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள்




போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் காளைகள் காலை 6 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு (அதாவது அதிக காளைகளைப் பிடிப்பவருக்கு) முதலமைச்சர் சார்பாக ரூ.8.50 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது மட்டும் இன்றி இந்தாண்டு நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெற்றி பெறும் காளையின் உரிமையாளருக்கு (அதாவது பிடிமாடாகமல் வெல்லும் காளையின் உரிமையாளருக்கு) முதல் முறையாக முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!

news

போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!

news

RIP Solomon Pappaiah: என்றும் நினைவோடு!

news

Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!

news

The School I Once Wanted to Leave

news

தமிழ் பட்டிமன்ற உலகின் ஆளுமை சாலமன் பாப்பையா.. அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

news

கொந்தளித்த திருமாவளவன்.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?

news

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!

news

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்

அதிகம் பார்க்கும் செய்திகள்