மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைக்கும், வீரருக்கும் சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த போட்டிகளைக்கான வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள். நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, பொங்கல் தினமான நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக, வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடங்கள், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 1,100காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
வீரரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள்
போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் காளைகள் காலை 6 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு (அதாவது அதிக காளைகளைப் பிடிப்பவருக்கு) முதலமைச்சர் சார்பாக ரூ.8.50 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் இன்றி இந்தாண்டு நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெற்றி பெறும் காளையின் உரிமையாளருக்கு (அதாவது பிடிமாடாகமல் வெல்லும் காளையின் உரிமையாளருக்கு) முதல் முறையாக முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Heavy Rain Alert: சென்னை மக்களே கவனம்.. 23, 23 தேதிகளில் சூப்பர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தகவல்!
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}