மதுரை: பொங்கல் தினமான நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 7ம் தேதி தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, 2,035 காளைகளும், 1,735 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். இதில், 1,100காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான டோக்கன்களுக்கான பதிவிறக்கம் தற்போது தொடங்கியுள்ளது.
அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு எராளமான பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் எற்படாத வகையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. அத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் அவனியாபுரத்தில் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பீகாரில் பிரதமர் மோடி பொய் பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}