அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது.. காளைகள் ரெடி.. ஆரம்பிக்கலாங்களா!

Jan 13, 2025,05:46 PM IST

மதுரை:   பொங்கல் தினமான நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியுள்ளது.


ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.




நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 7ம் தேதி தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள்  மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வந்தனர்.  இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, 2,035 காளைகளும், 1,735 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். இதில், 1,100காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான டோக்கன்களுக்கான பதிவிறக்கம் தற்போது தொடங்கியுள்ளது.


அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு எராளமான பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் எற்படாத வகையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் அப்பகுதியில்  போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. அத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் அவனியாபுரத்தில் செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்