அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் தினமும் ஒரு மணி நேரம் நடை சாத்தப்படும் என்று அக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட பால ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி கோலாகலமாக நடந்தது. இக்கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து முதல் பூஜையை செய்தார். பிரமாண்ட கோவிலில் பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. கர்ப்பகிரகத்தில் உள்ள ராம விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முடி இருந்த ராமர் கண்கள் திறக்கப்பட்டு, உயிர் பெறும் முக்கிய நிகழ்வு இனிதே நடந்தது.

500 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் இருந்த அயோத்தி தற்பொழுது புத்துயிர் பெற்றுள்ளது. தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமர். ராமர் பிறந்த இடத்தில்தான் இந்தக் கோவில் இப்போது கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராமர் சிலை, பால ராமர் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் நடை தினமும் நண்பகல் 12:30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில், ராம் லல்லா ஒரு ஐந்து வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும். அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோவில் கதவை மதியம் 12:30 முதல் 1.30 வரை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}