அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் தினமும் ஒரு மணி நேரம் நடை சாத்தப்படும் என்று அக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட பால ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி கோலாகலமாக நடந்தது. இக்கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து முதல் பூஜையை செய்தார். பிரமாண்ட கோவிலில் பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. கர்ப்பகிரகத்தில் உள்ள ராம விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முடி இருந்த ராமர் கண்கள் திறக்கப்பட்டு, உயிர் பெறும் முக்கிய நிகழ்வு இனிதே நடந்தது.

500 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் இருந்த அயோத்தி தற்பொழுது புத்துயிர் பெற்றுள்ளது. தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமர். ராமர் பிறந்த இடத்தில்தான் இந்தக் கோவில் இப்போது கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராமர் சிலை, பால ராமர் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் நடை தினமும் நண்பகல் 12:30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில், ராம் லல்லா ஒரு ஐந்து வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும். அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோவில் கதவை மதியம் 12:30 முதல் 1.30 வரை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}