புதுச்சேரி: அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி நேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், அவரது ஸ்டைலில் போட்ட கவிதை பரபரப்பை ஏற்படுத்தியதோடு, கமென்ட்டுகளையும் குவித்துள்ளது.
அவரது பாணி தமிழில் அதிரடியாக எழுதியிருந்தார் டாக்டர் தமிழிசை. அதற்கு ஆதரவாக பலரும், எதிர்த்து விமர்சித்து பலரும் பதில் கொடுத்திருந்தனர்.
"அக்கா ரிட்டர்ன்ஸ்" என்று அவரது ஆதரவாளர்கள் குதூகலிக்க, ஆளுநராக இருந்து கொண்டு இப்படி எழுதலாமாக்கா என்று பலர் ஆதங்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது.
இதுதான் டாக்டர் தமிழிசை போட்டிருந்த டிவீட்டில் உள்ள கவிதை:

பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வா "ராம்"
பெரியார் தொண்டர்களை ஆராதிப்பா "ராம்"
ஆனால் பெருமாள் பக்தர்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டா "ராம்"
அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறா"ராம்"
ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்"
ராமனை நீங்கள் விடுக்க முடியாது....
ராமனை நீங்கள் தடுக்க முடியாது....
எங்களுக்குள்ளும் இருக்கிறார் "ராம்"....
உங்களுக்குள்ளும் இருக்கிறார் "ராம்"....
அதனால்தான் அன்று செருப்பு மாலை போட்டவர்களை
நெருப்பில் சுடுகிறார் "ராம்"....
வெறுப்பை உமிழும் கறுப்பு இயக்கங்களை விரட்டி பொறுப்பாய் ஆசி வழங்கும் ராமன் - அதுவே
நம் தமிழ்நாட்டுக்கு வரப்போகும் ராமராஜ்ஜியம்.....
எம் தமிழ்நாட்டில் என்ன சிறப்பு எனில்....
எந்நாட்டிலும் ராம்நாடு இல்லை தமிழ்நாட்டில் ஓர் மாவட்டமே "ராம்"நாடு அதனால் தான் சீதையை தேடிய ராமனை... அங்கு தேடி மோடி வந்தார்....
உல்லாச பயணம் வரவில்லை....
11- நாள் உபவாசம் இருந்து பக்தியோடு வந்தார்....
அனைவரையும் சமமாக மதித்து சமூக நீதிக்கு வித்திட்ட நாயகனாக திகழ்ந்த ராமரை சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரித்து ஈரோட்டில் விதைத்த விஷ விதையை ஒழிக்க
தேரோட்டியின் தமையனாய் வந்தான் ராமன்....
ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்து ஒரு கூட்டம் அன்று....
இன்று கூட்டம் கூட்டமாக ராமனை வழிபட்டு தழைக்கப்போகிறது பெருங்கூட்டம் ராமராஜ்ஜியத்தில்....
அனைவர் கண்ணிலும் ஒளியாய் இருக்கும் ராமனை.....
காணொளியில் பார்க்க தடையாம்- தமிழகத்தில்....
வழக்கமாய் நடக்க வேண்டியதை வழக்காடு மன்றம் சென்று...வென்று பெற்றவர்களுக்கு
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....
தமிழ்நாடும் திரும்பி விட்டான்......
விரும்பி வணங்கிட தமிழர்கள் தயார்....
தடை ஏற்படுத்தப்பட்டால் தடைகள் தகர்த்தெறியப்படும்....
கத்தியால் அல்ல.... பக்தியால்....
மககள் சக்தியால்...
ஜெய்ஸ்ரீராம்....
ஜெய்ஸ்ரீராம்....
ஜெய்ஸ்ரீராம்....
என்று ஒலிக்கட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை....
இதுதான் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் எழுதியிருந்த பதிவு.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}