டெல்லி: பாபா வாங்கா என்ற கண் பார்வை இல்லாத பல்கேரியப் பெண்மணியின் கணிப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை. 2024ம் ஆண்டுக்கு அவர் கூறியுள்ள பல்வேறு கணிப்புகள் அதிர வைப்பதாக உள்ளது. இவையெல்லாம் நடக்குமா என்ற பரபபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது இயற் பெயர் வாஞ்செலியா பண்டேவா டிமிட்ரோவா . 1911ம் ஆண்டு பிறந்த இவருக்கு 12 வயது வரை வழக்கமான கண் பார்வை இருந்தது. ஆனால் இவரது 12வது வயதின்போது அங்கு வீசிய சூறாவளியில் இவரது கண் பார்வை போய் விட்டது. அதன் பிறகு இவர் பல்வேறு கணிப்புகளைக் கூற ஆரம்பித்தார். அவை பலிக்க ஆரம்பித்ததால் மக்கள் வியந்து போய் இவரை எதிர்காலத்தைக் கணிக்கும் ஞானியாக பார்க்க ஆரம்பித்தனர்.
தொடர்ந்து கணிப்புகளைக் கூற ஆரம்பித்த இவர் காலத்தையும் தாண்டி பல்வேறு வருடங்களுக்கான கணிப்புகளைக் கூறி வைத்துள்ளார். இவற்றில் பல உண்மையாகவே நடந்துள்ளன. 1996ம் ஆண்டு இவர் மறைந்தார்.
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபிள் பேரழிவு, பிரெக்ஸிட் உள்ளிட்டவை இவரது கணிப்புகளில் சில. இந்த நிலையில் 2024ம் ஆண்டு குறித்து இவர் கணித்து வைத்துள்ளது இப்போது பரபரப்பாக உலா வர ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இவரது 7 கணிப்புகள் பரபரப்பாக பேசப்படுகின்றன.
- ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினைக் கொல்ல சதி நடக்கும். அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவரே இதில் ஈடுபடுவார்.
- ஐரோப்பாவில் அதிக அளவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும். பெரிய நாடு ஒன்று அடுத்த ஆண்டு உயிரி ஆயுதத்தை பரீட்சித்துப் பார்க்கும் அல்லது அதை பயன்படுத்தும்.
- மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும். உலக அளவில் இது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். நாடுகளின் கடன்கள் அதிகரிக்கும். பூகோள ரீதியில் பதட்டங்கள் உருவாகும்.
- இயற்கைச் சீற்றங்கள் அதிக அளவில் உருவாகும். கால நிலை மாற்றம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
- இணையவழி தாக்குதல்கள் அதிகரிக்கும். மின்சார கட்டமைப்புகள், நீர் நிலை கட்டமைப்புகள், தேசிய பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகள் அதிகரிக்கும்.
- அல்ஸீமர், புற்று நோய் போன்ற தீர்க்க முடியாத பல நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்.
- குவான்டம் கம்ப்யூட்டிங்கில் புதிய புரட்சி உண்டாகும்.
இதில் எத்தனை பலிக்கப் போகிறது என்று தெரியவில்லை.. 2024 முதல்ல பிறக்கட்டும்.. அதன் பிறகு பாபா பாட்டி சொன்னது போல நடக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}