பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து சூப்பரான வெற்றியைப் பெற்றுள்ளார்.
பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளில் மெல்ல மெல்ல வெற்றிகளைப் பதித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான பி.வி. சிந்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றியுடன் தனது வேட்டையைத் தொடங்கியுள்ளார்.
பி.வி. சிந்துவும், மாலத்தீவு வீராங்கனை பாத்திமா நபா அப்துல் ரஸ்ஸாகும் முதல் சுற்றுப் போட்டியில் மோதினர். இதில் பாத்திமாவை பிரமாதமாக வீழ்த்தி வெற்றி பெற்றார் சிந்து. இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பி.வி. சிந்து அபார வெற்றியைப் பதிவு செய்தார். சிந்துவின் அதிரடிக்கு முன்பு மாலத்தீவு வீராங்கனை நிறையவே தடுமாறினார்.
இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர் சிந்து. அந்த வகையில் அவரது முதல் வெற்றியே முத்திரை பதிப்பதாக அமைந்துள்ளது இந்தியர்களை மகிழ்வித்துள்ளது.
பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக: அமைச்சர் சேகர்பாபு
ஆந்திராவும், கர்நாடகாவும் உழவர்களைக் காக்கின்றன: தமிழக அரசு துரோகம் செய்கிறது: டாக்டர் அன்புமணி!
சோமவார பிரதோஷம்.. மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி!
சற்று குறைந்தது தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
Middle East uncertainity: ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலால் இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
{{comments.comment}}