பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து சூப்பரான வெற்றியைப் பெற்றுள்ளார்.
பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளில் மெல்ல மெல்ல வெற்றிகளைப் பதித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான பி.வி. சிந்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றியுடன் தனது வேட்டையைத் தொடங்கியுள்ளார்.

பி.வி. சிந்துவும், மாலத்தீவு வீராங்கனை பாத்திமா நபா அப்துல் ரஸ்ஸாகும் முதல் சுற்றுப் போட்டியில் மோதினர். இதில் பாத்திமாவை பிரமாதமாக வீழ்த்தி வெற்றி பெற்றார் சிந்து. இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பி.வி. சிந்து அபார வெற்றியைப் பதிவு செய்தார். சிந்துவின் அதிரடிக்கு முன்பு மாலத்தீவு வீராங்கனை நிறையவே தடுமாறினார்.
இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர் சிந்து. அந்த வகையில் அவரது முதல் வெற்றியே முத்திரை பதிப்பதாக அமைந்துள்ளது இந்தியர்களை மகிழ்வித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}