ஒழுங்கா டிரஸ் பண்ணாட்டி ஆசிட் அடிப்பேன்.. மிரட்டிய இளைஞர்.. உடனடியாக வேலையிலிருந்து டிஸ்மிஸ்!

Oct 11, 2024,10:57 PM IST

பெங்களூரு: பத்திரிகையாளர் மனைவியை ஒழுங்காக டிரஸ் செய்யுமாறும், இல்லாவிட்டால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் மிரட்டி வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பிய பெங்களூரு நபர் வேலையிலிருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. 


பெங்களூரைச் சேர்ந்தவர் நிக்கித் ஷெட்டி. இவர் எடியோஸ் என்ற நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் InUth தளத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருபவர் ஷபாஸ் அன்சர். இவருக்கு வாட்ஸ் ஆப்பில் நிக்கித் ஷெட்டி ஒரு மெசேஜ் போட்டிருந்தார். அதில் உனது மனைவியை ஒழுங்காக டிரஸ் போடச் சொல்லு. இல்லாவிட்டால் அவரது முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டியிருந்தார்.




இதனால் அதிர்ச்சி அடைந்த ஷபாஸ் அன்சர் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக பதிவு போட்டிருந்தார். எனது மனைவியை இந்த நபர் மிரட்டுகிறார். இவர் சொல்வது போல நடப்பதற்குள் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறி கர்நாடக மாநில டிஜிபி உள்ளிட்டோரை அதில் டேக் செய்திருந்தார். மேலும் இந்த நபர் எடியோஸ் சர்வீஸஸ் என்ற ஷேர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்ப்பதை அறிந்து அதுதொடர்பான தகவல்களையும் அவர் ஷேர் செய்திருந்தார்.


இதையடுத்து எடியோஸ் நிறுவனத்திற்கு பலரும் புகார்களை அனுப்பி நிக்கித் ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதையடுத்து தற்போது எடியோஸ் நிறுவனம் நிக்கித் ஷெட்டியை 5 ஆண்டுகளுக்கு வேலையை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தங்களது ஊழியர் இதுபோல நடந்து கொண்டது  அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக கூறிய எடியோஸ் நிறுவனம், இதை ஏற்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளது.




நிறுவனத்தின் சார்பில் தற்போது போலீஸிலும் புகார் தரப்பட்டுள்ளது. விரைவில் நிக்கித் ஷெட்டி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. 


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷபாஸ் அன்சர் கூறுகையில் எனது மனைவி கியாதிஸ்ரீயின் உடை குறித்து மிரட்டிய நபருக்கு வேலை போயுள்ளது. அவர் வேலை பார்த்த நிறுவனம் துரித கதியில் செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இது நடைபெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்