பெங்களூரு: பத்திரிகையாளர் மனைவியை ஒழுங்காக டிரஸ் செய்யுமாறும், இல்லாவிட்டால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் மிரட்டி வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பிய பெங்களூரு நபர் வேலையிலிருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் நிக்கித் ஷெட்டி. இவர் எடியோஸ் என்ற நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் InUth தளத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருபவர் ஷபாஸ் அன்சர். இவருக்கு வாட்ஸ் ஆப்பில் நிக்கித் ஷெட்டி ஒரு மெசேஜ் போட்டிருந்தார். அதில் உனது மனைவியை ஒழுங்காக டிரஸ் போடச் சொல்லு. இல்லாவிட்டால் அவரது முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டியிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஷபாஸ் அன்சர் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக பதிவு போட்டிருந்தார். எனது மனைவியை இந்த நபர் மிரட்டுகிறார். இவர் சொல்வது போல நடப்பதற்குள் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறி கர்நாடக மாநில டிஜிபி உள்ளிட்டோரை அதில் டேக் செய்திருந்தார். மேலும் இந்த நபர் எடியோஸ் சர்வீஸஸ் என்ற ஷேர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்ப்பதை அறிந்து அதுதொடர்பான தகவல்களையும் அவர் ஷேர் செய்திருந்தார்.
இதையடுத்து எடியோஸ் நிறுவனத்திற்கு பலரும் புகார்களை அனுப்பி நிக்கித் ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதையடுத்து தற்போது எடியோஸ் நிறுவனம் நிக்கித் ஷெட்டியை 5 ஆண்டுகளுக்கு வேலையை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தங்களது ஊழியர் இதுபோல நடந்து கொண்டது அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக கூறிய எடியோஸ் நிறுவனம், இதை ஏற்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் சார்பில் தற்போது போலீஸிலும் புகார் தரப்பட்டுள்ளது. விரைவில் நிக்கித் ஷெட்டி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷபாஸ் அன்சர் கூறுகையில் எனது மனைவி கியாதிஸ்ரீயின் உடை குறித்து மிரட்டிய நபருக்கு வேலை போயுள்ளது. அவர் வேலை பார்த்த நிறுவனம் துரித கதியில் செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இது நடைபெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!
சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
{{comments.comment}}