பெங்களூரு : பெங்களூருவில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு பல மாதங்களாக பாடாய் படுத்தி வரும் நிலையில் இன்று 9 மணி நேரம் நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
பெங்களூருவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்குவதற்காக காவிரி நீரை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் 5ம் கட்ட பணிகளாக தற்போது தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் நடத்தப்பட உள்ளது. நகரில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் மிக முக்கியமான திட்டம் இதுவாகும். இந்த பணிகளுக்காக பெங்களூருவில் இன்று பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 9 மணி நேரம் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுப்ரமணிய நகர், பிரகாஷ் நகர், சங்கர்நகர், நந்தினி லேஅவுட், சாமுண்டாபுரா, பார்வதிநகர், ராஜாஜிநகர், தசரபல்லி, லட்சுமண்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் தண்ணீர் தேவையை போக்கும் இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பைப்லைன் வேலைகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், இதற்கு குடியிருப்பு வாசிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}