பெங்களூரு : பெங்களூருவில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு பல மாதங்களாக பாடாய் படுத்தி வரும் நிலையில் இன்று 9 மணி நேரம் நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
பெங்களூருவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்குவதற்காக காவிரி நீரை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் 5ம் கட்ட பணிகளாக தற்போது தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் நடத்தப்பட உள்ளது. நகரில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் மிக முக்கியமான திட்டம் இதுவாகும். இந்த பணிகளுக்காக பெங்களூருவில் இன்று பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 9 மணி நேரம் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுப்ரமணிய நகர், பிரகாஷ் நகர், சங்கர்நகர், நந்தினி லேஅவுட், சாமுண்டாபுரா, பார்வதிநகர், ராஜாஜிநகர், தசரபல்லி, லட்சுமண்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் தண்ணீர் தேவையை போக்கும் இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பைப்லைன் வேலைகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், இதற்கு குடியிருப்பு வாசிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}