பெங்களூரு : பெங்களூருவில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு பல மாதங்களாக பாடாய் படுத்தி வரும் நிலையில் இன்று 9 மணி நேரம் நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
பெங்களூருவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்குவதற்காக காவிரி நீரை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் 5ம் கட்ட பணிகளாக தற்போது தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் நடத்தப்பட உள்ளது. நகரில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் மிக முக்கியமான திட்டம் இதுவாகும். இந்த பணிகளுக்காக பெங்களூருவில் இன்று பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 9 மணி நேரம் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுப்ரமணிய நகர், பிரகாஷ் நகர், சங்கர்நகர், நந்தினி லேஅவுட், சாமுண்டாபுரா, பார்வதிநகர், ராஜாஜிநகர், தசரபல்லி, லட்சுமண்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் தண்ணீர் தேவையை போக்கும் இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பைப்லைன் வேலைகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், இதற்கு குடியிருப்பு வாசிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}