பெங்களூரு: பெங்களூரில், அரசு பெண் அதிகாரியைக் கொடூரமாகக் கொன்ற சம்பவத்தில் அவரது முன்னாள் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில அரசின் சுரங்கத்துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் பிரதீமா ராமன். இவர் தனது கணவர், மகனுடன் குவெம்பு நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சனிக்கிழமையன்று இவரது கணவரும், மகனும், சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்குப் போயிருந்தனர். வீட்டில் பிரதீமா மட்டுமே தனித்து இருந்தார்.
அடுத்த நாள் காலையில் பிரதீமாவின் சகோதரர் தனது தங்கையைக் காண வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்படாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர் உள்ளே போய் பார்த்தபோது பிரதீமா கொலையுண்ட நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சியானார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து பிரதீமாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்தி பிரதீமா கொல்லப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கிரண் என்ற நபரைப் போலீஸார் , சாம்ராஜ் நகரில் வைத்துக் கைது செய்துள்ளனர். இவர் பிரதீமாவிடம் டிரைவராகப் பணியாற்றி வந்தவர். சமீபத்தில் இவரை வேலையை விட்டு நீக்கி விட்டார் பிரதீமா. இந்த ஆத்திரத்தில் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்து பிரதீமாவுடன் வாக்குவாதம் செய்துள்ளார் கிரண். பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி விட்டார். இத்தகவலை பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}