பெங்களூரு: பெங்களூரில், அரசு பெண் அதிகாரியைக் கொடூரமாகக் கொன்ற சம்பவத்தில் அவரது முன்னாள் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில அரசின் சுரங்கத்துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் பிரதீமா ராமன். இவர் தனது கணவர், மகனுடன் குவெம்பு நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சனிக்கிழமையன்று இவரது கணவரும், மகனும், சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்குப் போயிருந்தனர். வீட்டில் பிரதீமா மட்டுமே தனித்து இருந்தார்.
அடுத்த நாள் காலையில் பிரதீமாவின் சகோதரர் தனது தங்கையைக் காண வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்படாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர் உள்ளே போய் பார்த்தபோது பிரதீமா கொலையுண்ட நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சியானார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து பிரதீமாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்தி பிரதீமா கொல்லப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கிரண் என்ற நபரைப் போலீஸார் , சாம்ராஜ் நகரில் வைத்துக் கைது செய்துள்ளனர். இவர் பிரதீமாவிடம் டிரைவராகப் பணியாற்றி வந்தவர். சமீபத்தில் இவரை வேலையை விட்டு நீக்கி விட்டார் பிரதீமா. இந்த ஆத்திரத்தில் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்து பிரதீமாவுடன் வாக்குவாதம் செய்துள்ளார் கிரண். பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி விட்டார். இத்தகவலை பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}