ஓட்டுப் போட்டாச்சா.. வாங்க.. வெண்ணெய் தோசை சாப்பிட்டுப் போங்க.. கலக்கிய ஹோட்டல்!

Apr 26, 2024,05:38 PM IST
பெங்களூரு: பெங்களூரில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஹோட்டலில் இலவசமாக தோசை, லட்டு, ஜூஸ் தரப்பட்டு அமர்க்களப்படுத்தி விட்டனர்.

இன்று கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  அதன்படி பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு ஊரகம், பெங்களூரு மத்திய, உடுப்பி - சிக்மகளூர், தட்சின் கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மைசூரு, சாம்ராஜ் நகர், ஹசன், கோலார், மாண்ட்யா, சிக்கபல்லபூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள நிசர்கா கிராண்ட் ஹோட்டலில் வாக்காளர்களுக்கு ஒரு இலவச ஆபரை அறிவித்திருந்தனர். அதன்படி இன்று வாக்களித்து விட்டு வரும் வாக்காளர்களுக்கு இலவசமாக வெண்ணெய் காலி தோசை, நெய் லட்டு மற்றும் ஜூஸ் ஆகியவை இலவசமாக தரப்படுகிறது. வாக்களித்து விட்டு வந்து அதற்கான அடையாளமாக மையிட்ட அடையாளத்தைக் காட்டி இதைப் பெற்றுக் கொள்ளலாம்.



இதையடுத்து ஏராளமான வாக்காளர்கள் கையில் மை வைத்துக் கொண்ட விரலுடன் ஹோட்டலுக்குப் படையெடுத்தனர். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் பலரும் ஹோட்டல் முன்பு நீண்ட வரிசையில் நின்று இலவச ஆபர் உணவைப் பெற்றுக் கொண்டதைக் காண முடிந்தது.

இது மட்டுமல்லாமல் பெங்களூரில் பல்வேறு நிறுவனங்களும் இதுபோன்ற இலவச ஆபர்களை அறிவித்திருந்தன. பெல்லாந்தூரில் உள்ள பப் ஒன்றில் வாக்காளர்களுக்காக ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய இரு திங்கள் மக் பீர் இலவசமாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வகை மதுக்களுக்கும் தள்ளுபடி சலுகையையும் அறிவித்துள்ளனர்.

ரேபிடோ டாக்சி நிறுவனமும் வாக்களிக்கச் செல்லும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சவாரி சலுகையை அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனமும் கூடுதல் ரயில்களை இயக்குகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்