கன்னடம் பேச முடியாது என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி அதிரடியாக பணியிட மாற்றம்

May 21, 2025,06:52 PM IST

பெங்களூரு: பெங்களூரு எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கன்னடத்தில் பேச முடியாது என கூறிய மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகம் நீங்கள் கன்னடத்தில் தான் பேச வேண்டும் என்று கூற, அதற்கு அந்த வங்கி மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகா நீங்கள் எங்கள் மொழியில் தான் பேச வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு வங்கி மேலாளர் நான் ஒருபோதும் கன்னடத்தில் பேச மாட்டேன். இந்தியில் தான் பேசுவேன் என்று அவரிடம் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.




இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக கர்நாடகா மாநில முதலைச்சர் சித்தராமையா, தனது எக்ஸ் தள பக்கத்தில், அனேகல் தாலுகா, சூர்யா நகராவில் உள்ள எஸ்பிஐ கிளை மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்தியது என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதிகாரியை பணியிடமாற்றம் செய்ய எஸ்பிஐ எடுத்த விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்.


இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது. அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். அதேபோல உள்ளூர் மொழியில் பேசுவதற்கு வங்கி ஊழியர்கள் முயற்சி எடுக்க வேண்டும். உள்ளூர் மொழியை மதிப்பது மக்களை மதிப்பதாகும். கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் கன்னடத்தில் பேச முயற்சிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கலாச்சாரம் மற்றும் மொழி உணர்திறன் பயிற்சியை கட்டாயப்படுத்த மத்திய நிதி மற்றும் நிதி சேவைகள் துறையை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரபிக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஏன்?.. அரசு தரும் விளக்கம்

news

கன்னடம் பேச முடியாது என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி அதிரடியாக பணியிட மாற்றம்

news

வளையங்குளம் துயர நிகழ்வு.. இதுதான் இந்தியாவே வியக்கும் திமுக அரசின் 4 ஆண்டு காலச் சாதனையா? : சீமான்

news

மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேணும்.. பசங்களைப் பார்த்துக்கணும்.. ஆர்த்தி ரவி அதிரடி டிமாண்ட்!

news

எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

ரீவிசிட் அடிக்கிறதா கொரோனா.. நிலவரம் என்ன?.. டாக்டர் பரூக் அப்துல்லா சொல்வதைக் கேளுங்க!

news

தமிழ்நாட்டின் நிதி உரிமையை வெளிப்படுத்த.. 24ம் தேதி டெல்லி செல்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்