வாஷிங்டன்: உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டுள்ள நிலையில், பாலஸ்தீனியர்களின் நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.
இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தம் பல ஆண்டு காலமாக முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கும் கதை. பாலஸ்தீன வரலாறு தெரியாமல் இன்று பலரும் இஷ்டத்துக்கு கதை விட்டுக் கொண்டுள்ளனர், தங்களது ஆதரவு நிலைப்பாடுகளை தப்புத் தப்பாக எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே கூட பலருக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை.

ஹமாஸ் போராளிகள் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலுக்கு பழிவாங்குவதாக கூறி, அவர்களை அழிப்பதாக கூறி பாலஸ்தீனத்தையே அழிக்க இறங்கி விட்டது இஸ்ரேல். காஸா நகரை குண்டு வீச்சாலும், ராக்கெட் வீச்சாலும் சின்னாபின்னமாக்கி வருகிறது இஸ்ரேலிய படைகள்.. அடுத்து ராணுவம் உள்ளே புகுந்து மொத்த காஸா நகரையும் தன் வசம் எடுக்கும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழும் குரல்களையும் பலர் முடக்கி ஒடுக்கி விடுகிறார்கள். இந்தப் பின்னணியில் பாலஸ்தீனம் குறித்தும் அமெரிக்காவிலிருந்து ஒரு குரல் வெளிப்பட்டுள்ளது. அது பராக் ஒபாமாவின் குரல்.
பராக் ஒபாமா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் மீதான மோசமான தீவிரவாதத் தாக்குதல் அத்தனை அமெரிக்கர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோபப்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் கொன்ற செயலை ஏற்கவே முடியாது. இறந்தவர்களுக்காக நாம் இரங்கல் தெரிவிக்கிறோம். அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து நிற்கிறோம். பிணைக் கைதிகளாக தீவிரவாதிகளால் கொண்டு செல்லப்பட்டவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். இஸ்ரேலுடன் நாம் உறுதிபட இணைந்து நிற்கிறோம்.
ஹமாஸ் அமைப்பு முற்றிலும் செயலிழக்க வேண்டும். இஸ்ரேல் தன்னை தீவிரவாதத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ள அதே நேரத்தில், இஸ்ரேலியர்களுக்கு மட்டுமல்லாமல், பாலஸ்தீனியர்களுக்கும் நீடித்த அமைதி ஏற்பட அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் பராக் ஒபாமா.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}