வாஷிங்டன்: உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டுள்ள நிலையில், பாலஸ்தீனியர்களின் நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.
இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தம் பல ஆண்டு காலமாக முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கும் கதை. பாலஸ்தீன வரலாறு தெரியாமல் இன்று பலரும் இஷ்டத்துக்கு கதை விட்டுக் கொண்டுள்ளனர், தங்களது ஆதரவு நிலைப்பாடுகளை தப்புத் தப்பாக எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே கூட பலருக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை.

ஹமாஸ் போராளிகள் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலுக்கு பழிவாங்குவதாக கூறி, அவர்களை அழிப்பதாக கூறி பாலஸ்தீனத்தையே அழிக்க இறங்கி விட்டது இஸ்ரேல். காஸா நகரை குண்டு வீச்சாலும், ராக்கெட் வீச்சாலும் சின்னாபின்னமாக்கி வருகிறது இஸ்ரேலிய படைகள்.. அடுத்து ராணுவம் உள்ளே புகுந்து மொத்த காஸா நகரையும் தன் வசம் எடுக்கும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழும் குரல்களையும் பலர் முடக்கி ஒடுக்கி விடுகிறார்கள். இந்தப் பின்னணியில் பாலஸ்தீனம் குறித்தும் அமெரிக்காவிலிருந்து ஒரு குரல் வெளிப்பட்டுள்ளது. அது பராக் ஒபாமாவின் குரல்.
பராக் ஒபாமா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் மீதான மோசமான தீவிரவாதத் தாக்குதல் அத்தனை அமெரிக்கர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோபப்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் கொன்ற செயலை ஏற்கவே முடியாது. இறந்தவர்களுக்காக நாம் இரங்கல் தெரிவிக்கிறோம். அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து நிற்கிறோம். பிணைக் கைதிகளாக தீவிரவாதிகளால் கொண்டு செல்லப்பட்டவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். இஸ்ரேலுடன் நாம் உறுதிபட இணைந்து நிற்கிறோம்.
ஹமாஸ் அமைப்பு முற்றிலும் செயலிழக்க வேண்டும். இஸ்ரேல் தன்னை தீவிரவாதத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ள அதே நேரத்தில், இஸ்ரேலியர்களுக்கு மட்டுமல்லாமல், பாலஸ்தீனியர்களுக்கும் நீடித்த அமைதி ஏற்பட அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் பராக் ஒபாமா.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}