மும்பை: ரோஹித் சர்மா தலைமையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவித்துள்ள பிசிசிஐ, இதே அணி இந்தியா- இங்கிலாந்து ஒரு நாள் தொடரிலும் விளையாடும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே டி20 தொடருக்கான அணியை அறிவித்து விட்டது பிசிசிஐ என்பது நினைவிருக்கலாம்.

விக்கெட் கீப்பர்களாக கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் தரப்படவில்லை. முகம்மது சிராஜும் அணியில் இடம் பெறவில்லை. ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்றைய அணி அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் தலைமைத் தேர்வாளர் அஜீத் அகர்கரும், கேப்டன் ரோஹித் சர்மாவும் மட்டுமே கலந்து கொண்டனர். பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பங்கேற்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்டிக் பாண்ட்யா, அக்ஸார் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகம்மது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்
மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
{{comments.comment}}