மும்பை: ரோஹித் சர்மா தலைமையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவித்துள்ள பிசிசிஐ, இதே அணி இந்தியா- இங்கிலாந்து ஒரு நாள் தொடரிலும் விளையாடும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே டி20 தொடருக்கான அணியை அறிவித்து விட்டது பிசிசிஐ என்பது நினைவிருக்கலாம்.

விக்கெட் கீப்பர்களாக கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் தரப்படவில்லை. முகம்மது சிராஜும் அணியில் இடம் பெறவில்லை. ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்றைய அணி அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் தலைமைத் தேர்வாளர் அஜீத் அகர்கரும், கேப்டன் ரோஹித் சர்மாவும் மட்டுமே கலந்து கொண்டனர். பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பங்கேற்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்டிக் பாண்ட்யா, அக்ஸார் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகம்மது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}