மும்பை: ரோஹித் சர்மா தலைமையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவித்துள்ள பிசிசிஐ, இதே அணி இந்தியா- இங்கிலாந்து ஒரு நாள் தொடரிலும் விளையாடும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே டி20 தொடருக்கான அணியை அறிவித்து விட்டது பிசிசிஐ என்பது நினைவிருக்கலாம்.
விக்கெட் கீப்பர்களாக கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் தரப்படவில்லை. முகம்மது சிராஜும் அணியில் இடம் பெறவில்லை. ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்றைய அணி அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் தலைமைத் தேர்வாளர் அஜீத் அகர்கரும், கேப்டன் ரோஹித் சர்மாவும் மட்டுமே கலந்து கொண்டனர். பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பங்கேற்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்டிக் பாண்ட்யா, அக்ஸார் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகம்மது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்
முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்
பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!
கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!
{{comments.comment}}