- பா. பானுமதி
போதும் மட்டும் பொன் கிடைத்துவிட்டால்
பொங்கி வழிகிறது மகிழ்ச்சி
விரும்பும் பெண் மட்டும் துணையாகி விட்டால்
துள்ளி எழுகிறது நெகழ்ச்சி
வேண்டும் வேலை கிடைத்து விட்டால்
விண்வரை எகிருது வளர்ச்சி
வீடு மனை சொத்து சுகம் அமைந்துவிட்டால்
விரைந்து வருது புகழ்ச்சி
ஆட்சி அதிகாரம் அனைத்தும் அமைந்துவிட்டால்
அதன் பின் ஏது இகழ்ச்சி

பணம் புகழ் பெண் வீடு மனை சொத்து சுகம் என
எவ்வளவு அமைந்தாலும் அமைதி அடையாத மனம்
இவ்வளவு இருந்து என்ன இதற்கு மேல் என்ன இருக்கிறது என்று
தேடி ஓடி ஆடி அலைகிறதே தவிர
அமைந்துவிட்டதில் அகம் மகிழ்வு கொள்வதில்லை
இன்னும் இன்னும் என்று சென்று கொண்டிருந்தால்..
இருப்பதை என்று ரசிப்பாய் புசிப்பாய் வசிப்பாய்
யோசி மனமே யோசி
இது போதும் என மனதுக்குள்ளே வாசி
அதுவே இறைவனின் ஆசி....
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}