- பா. பானுமதி
பூமியை தோண்டி தேடினாலும் தெரியவில்லை
வானில் பறந்து பார்த்தாலும் கிடைக்கவில்லை
அக்கம் பக்கம் அலைந்து திரிந்தும் அமையவில்லை
கண்கள் தேட கால்கள் ஓட கைகூடவில்லை
மண்டியிட்டு அழைத்தாலும் மகிழ்வில்லை
தாண்டி விட்டு சென்றாலும் திகழவில்லை
நட்பிலும் காதலிலும் மிளிரவில்லை
வீட்டிலும் வெளியிலும் மலரவில்லை

பகலிலும் இரவிலும் ஒளிர வில்லை
பார்த்து பார்த்து நின்றாலும் படியவில்லை
இறுக்கிப்பிடித்தாலும் இளகவில்லை
இசைவாய் இருந்தாலும் ஒழுகவில்லை
இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ...
உனக்குள் உருவாகும் வெளிச்சக்கோடு
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
தேவை!
பெண்கள் அன்றும், இன்றும், என்றும்!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
If you want to be successful do this first!
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை
{{comments.comment}}