எந்த நிறமானாலும்.. ஏற்புடையதே.. இதயத்தில் தெளிவு இருந்தால்!

Feb 06, 2026,12:40 PM IST

- பா.பானுமதி


நிறம் நிரந்தரம் இல்லை தான் 

சிவந்தவன் நிழல் கருப்பு 

கருத்தவன் குருதியோ சிவப்பு

உயர்ந்தவன் உள்ளமோ வெண்மை 

உண்மையற்றவன் உயர்வு கருமை 

வாழ்வில் கிடைக்கும் நல் உறவுகளே நல் நிறம் 

வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் வேலையே 




நிறத்தை மீட்டும் சுரம் 

நம்மிடம் இருக்கும் பணமே 

சமூகத்தில் தரும் நிறத்தில் தரம் 

நம்முடன் பிறந்த குணமே என்றும்

நிறத்தில் நிம்மதி தரும் நிரந்தரம் 

வெளுத்த பகலில் உழைத்தாலும் 

கருத்த இரவிலே உறக்கம் கொண்டாலே 


அடுத்த நாள் முதல் வாழ்க்கை வண்டி

வானவில் நிறமாய் ஓடும் 

பகலை காட்டிலும் இரவே ரம்மியமானது

இரவைக் காட்டிலும் பகலே 

பயம் நீக்கி பளபளப்பது

எந்த நிறம் ஆனாலும் ஏற்புடையது தான் 

இதயத்தில் தெளிவு இருந்தால்! 


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்