எந்த நிறமானாலும்.. ஏற்புடையதே.. இதயத்தில் தெளிவு இருந்தால்!

Feb 06, 2026,12:40 PM IST

- பா.பானுமதி


நிறம் நிரந்தரம் இல்லை தான் 

சிவந்தவன் நிழல் கருப்பு 

கருத்தவன் குருதியோ சிவப்பு

உயர்ந்தவன் உள்ளமோ வெண்மை 

உண்மையற்றவன் உயர்வு கருமை 

வாழ்வில் கிடைக்கும் நல் உறவுகளே நல் நிறம் 

வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் வேலையே 




நிறத்தை மீட்டும் சுரம் 

நம்மிடம் இருக்கும் பணமே 

சமூகத்தில் தரும் நிறத்தில் தரம் 

நம்முடன் பிறந்த குணமே என்றும்

நிறத்தில் நிம்மதி தரும் நிரந்தரம் 

வெளுத்த பகலில் உழைத்தாலும் 

கருத்த இரவிலே உறக்கம் கொண்டாலே 


அடுத்த நாள் முதல் வாழ்க்கை வண்டி

வானவில் நிறமாய் ஓடும் 

பகலை காட்டிலும் இரவே ரம்மியமானது

இரவைக் காட்டிலும் பகலே 

பயம் நீக்கி பளபளப்பது

எந்த நிறம் ஆனாலும் ஏற்புடையது தான் 

இதயத்தில் தெளிவு இருந்தால்! 


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையைக் குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

news

ஹலோ மும்பை இந்தியன்ஸ்.. முதல்ல கேப்டனை மாத்துங்க.. ஆர்.அஸ்வின் வார்னிங்!

news

வலிமையான மனமும்.. தெய்வமும்.. நித்தியஸ்ரீயின் இரு கவிதைகள்!

news

Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

news

அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு

news

நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்

news

ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

news

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

news

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்