- பா.பானுமதி
நிறம் நிரந்தரம் இல்லை தான்
சிவந்தவன் நிழல் கருப்பு
கருத்தவன் குருதியோ சிவப்பு
உயர்ந்தவன் உள்ளமோ வெண்மை
உண்மையற்றவன் உயர்வு கருமை
வாழ்வில் கிடைக்கும் நல் உறவுகளே நல் நிறம்
வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் வேலையே

நிறத்தை மீட்டும் சுரம்
நம்மிடம் இருக்கும் பணமே
சமூகத்தில் தரும் நிறத்தில் தரம்
நம்முடன் பிறந்த குணமே என்றும்
நிறத்தில் நிம்மதி தரும் நிரந்தரம்
வெளுத்த பகலில் உழைத்தாலும்
கருத்த இரவிலே உறக்கம் கொண்டாலே
அடுத்த நாள் முதல் வாழ்க்கை வண்டி
பகலை காட்டிலும் இரவே ரம்மியமானது
இரவைக் காட்டிலும் பகலே
பயம் நீக்கி பளபளப்பது
எந்த நிறம் ஆனாலும் ஏற்புடையது தான்
இதயத்தில் தெளிவு இருந்தால்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
உன்னை அறிந்தால்!
Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
Feelings are the language of the soul .. ஆன்மாவின் மொழிதான் உணர்வு!
எரிந்த கடிதத்தின் வாசனை!
{{comments.comment}}