எந்த நிறமானாலும்.. ஏற்புடையதே.. இதயத்தில் தெளிவு இருந்தால்!

Feb 06, 2026,12:40 PM IST

- பா.பானுமதி


நிறம் நிரந்தரம் இல்லை தான் 

சிவந்தவன் நிழல் கருப்பு 

கருத்தவன் குருதியோ சிவப்பு

உயர்ந்தவன் உள்ளமோ வெண்மை 

உண்மையற்றவன் உயர்வு கருமை 

வாழ்வில் கிடைக்கும் நல் உறவுகளே நல் நிறம் 

வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் வேலையே 




நிறத்தை மீட்டும் சுரம் 

நம்மிடம் இருக்கும் பணமே 

சமூகத்தில் தரும் நிறத்தில் தரம் 

நம்முடன் பிறந்த குணமே என்றும்

நிறத்தில் நிம்மதி தரும் நிரந்தரம் 

வெளுத்த பகலில் உழைத்தாலும் 

கருத்த இரவிலே உறக்கம் கொண்டாலே 


அடுத்த நாள் முதல் வாழ்க்கை வண்டி

வானவில் நிறமாய் ஓடும் 

பகலை காட்டிலும் இரவே ரம்மியமானது

இரவைக் காட்டிலும் பகலே 

பயம் நீக்கி பளபளப்பது

எந்த நிறம் ஆனாலும் ஏற்புடையது தான் 

இதயத்தில் தெளிவு இருந்தால்! 


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இயற்பியலும் இயக்கமும்.. எல்லாமே அதை மையமாக வைத்துதான் நடக்குது!

news

சர்வதேச அளவில்.. பெண்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான மனித உரிமை மீறல் இதுதான்!

news

தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

news

பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

news

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி

news

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

news

தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

news

வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.1,600 குறைவு!

news

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு...காரணம் இது தானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்