Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!

Jul 09, 2025,11:36 AM IST

டெல்லி: மத்திய அரசின் "தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, பெருநிறுவன ஆதரவு" கொள்கைகளைக் கண்டித்து, 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அரசுத் துறைகளைச் சேர்ந்த முக்கிய ஊழியர்கள் இதில் பங்கேற்கின்றனர்.


பத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும், பல்வேறு விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் அமைப்புகளின் ஆதரவுடன் இந்தப் பொது வேலைநிறுத்தமானது பாரத் பந்த் என்று பெயரில் தொடங்கியுள்ளது.




வங்கி, அஞ்சல் சேவை, போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொதுச் சேவைகளில் இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எவை பாதிக்கப்படும்?


நிதி சார்ந்த அனைத்துப் பணிகளும் ஸ்தம்பிக்கும்.

தபால் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும்.

தொழில் உற்பத்தி வெகுவாகக் குறையலாம்

பேருந்து சேவைகள் பாதிக்கப்படலாம்

அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாகப் பணிகள் முடங்கும்.

விவசாயிகளின் பேரணி உள்ளிட்டவற்றுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது


எவை செயல்படும்?


கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும்.

தனியார் நிறுவனங்கள் இயங்கும்.

ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படாது


எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் தாக்கம் கணிசமாக இருக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.


அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், இந்திய தொழிற்சங்கங்களின் மையம், 

ஹிந்த் மஸ்தூர் சபா, சுயதொழில் புரியும் பெண்கள் சங்கம், தொழிலாளர் முன்னேற்றக் கழகம், ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவை இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்