மே 12ல் மாபெரும் உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு.. நீங்களும் பங்கேற்க முன்பதிவு செய்யுங்க

Mar 22, 2025,03:26 PM IST
சென்னை : தமிழகத்தில் பிரம்மாண்ட பரத நாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி மே 12 ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் உடனடியாக ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

நடராஜர் ஆலயம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டுள்ள நடராஜர் கோவில் தான். ஆனால் நடராஜர் சுயம்புவாக, உயிரோட்டமுள்ள திருமேனியாக காட்சி தரும் தலம் ஒன்று உள்ளது. அது தான் கோனேரிராஜபுரம். பலரும் அறிந்திடாத இந்த கோவிலில் நடராஜரின் திருமேனி, உளி கொண்டு செதுக்கப்படாதது. இதில் நகரங்கள், ரோமங்கள், நரம்புகள் உள்ளிட்டவைகள் மனித உடலில் இருப்பது போலவே காட்சி தரும். அதே போல் மன்னர் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்பும் நடராஜரின் வலது காலில் இன்றும் இருக்கும்.

இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலம்தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள கோனேரிராஜபுரம் திருக்கோவில். இங்கு, தில்லை அம்பலம் என்ற பெயரில் மே 12ம் தேதி மாலை 4 மணிக்கு, மாபெரும் பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோனேரிராஜபுரம் என்பது ஆடல் அரசனான  நடராஜ பெருமான் சுயம்புவாக கோவில் கொண்டுள்ள தலமாகும். உலகத்திலேயே நடராஜர் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் ஒரே தலம் கோனேரிராஜபுரம் தான். இங்கு ஐந்து உயர ஐம்பொன்னாலான நடராஜர் அருள்பாலிக்கிறார். 



International pride World records என்ற பெயரில் கோனேரிராஜபுரத்தில் மாபெரும் உலக சாதனை சித்திரை பெளர்ணமி திருநாளில் பரதம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலகின் மிகப் பெரிய சுயம்பு நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணமாக இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் புகழ்பெற்ற நடன இயக்குனர் கலா மாஸ்டர் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி அனைத்து தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்ச்ச்யில் பங்கேற்க விரும்புபவர்கள் 7539901066, 7539901066 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும், Virtual2Live Appல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி திருச்சி மொரைஸ் நகரில் இதேபோன்ற பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
திருச்சி மொரைஸ் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பரதகலைஞர்களின் குடும்பங்கள் கலந்து கொண்டனர்.

கலா மாஸ்டர், கொற்றவை தமிழ்சபை நிறுவனர் மடாதிபதி குருஜி சுரேந்திர ஸ்ரீ மகாராஜ் ஆகியோர் பங்கேற்று நிகழ்வின் அழகை கூட்டினர். சிவன், பார்வதி மற்றும் கணேசன் யானை தெய்வீக தோற்றம் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது. இந்த நிகழ்வு IPWR - இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் குழு உலகசாதனையை ஆராய்ந்து அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ADMK candidates: 23 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடியில் மீண்டும் பழனிச்சாமி போட்டி!

news

தங்கமே உன்னை ரசிக்கிறேன்.. ஆனாலும் கொஞ்சம் வெறுக்கிறேன்

news

ம.நீ.ம சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் அறிவிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

news

இலவச ஃபிரிட்ஜ், தீபாவளிக்கு வேட்டி சேலை... அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

news

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் - இதுவரை 56 இடங்கள் ஒதுக்கீடு

news

திமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு எத்தனை தொகுதிகள்? இன்று இரவு முடிவாகிறது

news

அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது? பியூஷ் கோயலுடன் முக்கிய சந்திப்பு

news

திமுக கூட்டணியில் விசிக.,விற்கு 8 இடங்கள் ஒதுக்கீடு

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்...பயண விபரம் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்