மனைவி முன்பு.. அங்கிள் என கூப்பிட்ட கடைக்காரர்.. கடுப்பான கணவர்.. அதுக்குப் பிறகு நடந்த சம்பவம்!

Nov 04, 2024,06:09 PM IST

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் ஜவுளிக் கடைக்கு தனது மனவியுடன் சென்ற நபரைப் பார்த்து, கடைக்காரர் அங்கிள் என்று கூப்பிட்டதால் அந்த நபர் கோபமடைந்தார். தனது நண்பர்களை கூட்டிக் கொண்டு வந்து கடைக்காரரை சரமாரியாக அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


சில ஆண்களுக்கு தங்களை யாராவது அங்கிள் என்று கூப்பிட்டால் பிடிக்காது.  அதேபோல சில பெண்களுக்கு ஆன்ட்டி என்று கூப்பிட்டால் பிடிக்காது. அதை கெளரவக் குறைச்சலாக நினைப்போரும் உண்டு. ஆனால் அங்கிள் என்று ஒருவர் கூப்பிட்டதற்காக ஆள் வைத்து அந்த நபரை அடித்து உதைத்துள்ளார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்!




மனைவி முன்பு தன்னை அந்த நபர் அங்கிள் என்று கூப்பிட்டதால் வந்த கடுப்பில்தான் இப்படி தகராறு ஆகியிருக்கிறது.


போபால் அருகே உள்ள ஜாட்கோடி என்ற பகுதியில் விஷால் சாஸ்திரி என்பவர் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஜவுளி கடைக்கு சனிக்கிழமை ரோகித் என்ற வாடிக்கையாளர் தனது மனைவியுடன் சேலை வாங்க வந்துள்ளார். இந்த தம்பதியினர் வெகு நேரமாக புடவைகளை பார்த்துக் கொண்டே இருந்துள்ளனர். ஆனாலும் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை.


இவர்கள் ரொம்ப நேரமாக சேலையைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த  கடை உரிமையாளர் விஷால்  சாஸ்திரி, ரோகித்திடம், உங்களுக்கு என்ன விலையில் புடவை வேண்டும் என கேட்டுள்ளார்‌. அதற்கு ரோகித்தோ 1000 ரூபாய் பட்ஜெட்டில் பார்க்கிறோம். அதை விட ஜாஸ்தியா இருந்தாலும் பரவாயில்லை. என்னால் வாங்க முடியும் என கோபமாக கூறியுள்ளார். 


இதையடுத்து விஷால், ஓகே அங்கிள் என் கூட வாங்க உங்களுக்குப் பிடிச்ச மாதிரி காட்டறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் கோபமாகி விட்டார் ரோஹித். அது எப்படி என்னை அங்கிள்னு கூப்பிடுவே.. இன்னொரு தடவை கூப்பிட்டா அவ்வளவுதான் நடப்பதே வேற என்று கூறி கத்தியுள்ளார். கடைக்காரருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரோஹித் பின்னர் சேலை வாங்காமல் மனைவியுடன் கடையிலிருந்து வெளியேறினார். 


சிறிது நேரம் கழித்து நண்பர்களுடன் மீண்டும் கடைக்கு வந்த ரோகித் விஷாலை கடையை விட்டு வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் விஷாலிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த விஷால் காவல் நிலையத்திற்கு சென்று ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தார். இதன் பின்னர் விஷால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி விரைவில் ரோஹித் உள்ளிட்டோர் கைது செய்யப்படசவர் என்று தெரிவித்துள்ளனர்.


அங்கிள்னு கூப்பிட்டது தப்பாய்யா.. இதுக்கெல்லாமா ஆளைக் கூட்டி வந்து அடிப்பது.. என்னா bro இது..!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!

news

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

news

வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்