மனைவி முன்பு.. அங்கிள் என கூப்பிட்ட கடைக்காரர்.. கடுப்பான கணவர்.. அதுக்குப் பிறகு நடந்த சம்பவம்!

Nov 04, 2024,06:09 PM IST

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் ஜவுளிக் கடைக்கு தனது மனவியுடன் சென்ற நபரைப் பார்த்து, கடைக்காரர் அங்கிள் என்று கூப்பிட்டதால் அந்த நபர் கோபமடைந்தார். தனது நண்பர்களை கூட்டிக் கொண்டு வந்து கடைக்காரரை சரமாரியாக அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


சில ஆண்களுக்கு தங்களை யாராவது அங்கிள் என்று கூப்பிட்டால் பிடிக்காது.  அதேபோல சில பெண்களுக்கு ஆன்ட்டி என்று கூப்பிட்டால் பிடிக்காது. அதை கெளரவக் குறைச்சலாக நினைப்போரும் உண்டு. ஆனால் அங்கிள் என்று ஒருவர் கூப்பிட்டதற்காக ஆள் வைத்து அந்த நபரை அடித்து உதைத்துள்ளார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்!




மனைவி முன்பு தன்னை அந்த நபர் அங்கிள் என்று கூப்பிட்டதால் வந்த கடுப்பில்தான் இப்படி தகராறு ஆகியிருக்கிறது.


போபால் அருகே உள்ள ஜாட்கோடி என்ற பகுதியில் விஷால் சாஸ்திரி என்பவர் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஜவுளி கடைக்கு சனிக்கிழமை ரோகித் என்ற வாடிக்கையாளர் தனது மனைவியுடன் சேலை வாங்க வந்துள்ளார். இந்த தம்பதியினர் வெகு நேரமாக புடவைகளை பார்த்துக் கொண்டே இருந்துள்ளனர். ஆனாலும் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை.


இவர்கள் ரொம்ப நேரமாக சேலையைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த  கடை உரிமையாளர் விஷால்  சாஸ்திரி, ரோகித்திடம், உங்களுக்கு என்ன விலையில் புடவை வேண்டும் என கேட்டுள்ளார்‌. அதற்கு ரோகித்தோ 1000 ரூபாய் பட்ஜெட்டில் பார்க்கிறோம். அதை விட ஜாஸ்தியா இருந்தாலும் பரவாயில்லை. என்னால் வாங்க முடியும் என கோபமாக கூறியுள்ளார். 


இதையடுத்து விஷால், ஓகே அங்கிள் என் கூட வாங்க உங்களுக்குப் பிடிச்ச மாதிரி காட்டறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் கோபமாகி விட்டார் ரோஹித். அது எப்படி என்னை அங்கிள்னு கூப்பிடுவே.. இன்னொரு தடவை கூப்பிட்டா அவ்வளவுதான் நடப்பதே வேற என்று கூறி கத்தியுள்ளார். கடைக்காரருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரோஹித் பின்னர் சேலை வாங்காமல் மனைவியுடன் கடையிலிருந்து வெளியேறினார். 


சிறிது நேரம் கழித்து நண்பர்களுடன் மீண்டும் கடைக்கு வந்த ரோகித் விஷாலை கடையை விட்டு வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் விஷாலிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த விஷால் காவல் நிலையத்திற்கு சென்று ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தார். இதன் பின்னர் விஷால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி விரைவில் ரோஹித் உள்ளிட்டோர் கைது செய்யப்படசவர் என்று தெரிவித்துள்ளனர்.


அங்கிள்னு கூப்பிட்டது தப்பாய்யா.. இதுக்கெல்லாமா ஆளைக் கூட்டி வந்து அடிப்பது.. என்னா bro இது..!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!

news

மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ

news

46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!

news

தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா

news

டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்

news

பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!

news

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்

news

களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்