பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இன்று ராஜினாமா செய்கிறார். அதன் பின்னர் மீண்டும் அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் 10வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்கிறார். இன்று ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்றக் கட்சித் தலைவராக நிதீஷ் குமார், தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர், பிற்பகல் 3:30 மணிக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஐந்து கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் பீகார் சட்டமன்றத்தின் மத்திய மண்டபத்தில் கூடி, நிதீஷ் குமாரை கூட்டணிக் கட்சித் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள்.
இதைத் தொடர்ந்து, அவர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று புதிய அரசை அமைப்பதற்கான ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் அரிஃப் முகமது கானிடம் சமர்ப்பிப்பார். இதன்பிறகு, தற்போதைய சட்டமன்றம் கலைக்கப்படும்.

கடந்த வாரம் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 இடங்களில், NDA கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றியது. இதில், பாரதிய ஜனதா கட்சி (BJP) 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) 85 இடங்களைப் பெற்றது. சிராக் பாஸ்வானின் எல்ஜேபி (ஆர்வி) 19 இடங்கள், எச்ஏஎம் ஐந்து இடங்கள், மற்றும் ஆர்எல்எம் நான்கு இடங்கள் என சிறிய கூட்டணிக் கட்சிகளும் இணைந்து NDA-வின் பெரும்பான்மையை உறுதி செய்தன.
நாளை வியாழக்கிழமை காலை நிதீஷ் குமார் முதலமைச்சராகப் பதவியேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அமைச்சர்களும் பாட்னாவின் காந்தி மைதானத்தில் பதவியேற்பார்கள். இந்த பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மைதானத்தில் தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியும் பதவியேற்பு விழாவுக்கு வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தகம்
Kavi Kalai poem: விதை
தோல்வியில் துவளேல்!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
தேடலும் தொலைதலும்!
Haiku by Ira Mumtaz Begum: கண்ணாடி பெட்டிக்குள்.. கண்ணீர் விடும் மீன்கள்!
கலைநிகழ்ச்சி களைகட்டுது.. பள்ளி வளாகம்.. ரசித்து பார்க்குது!
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
{{comments.comment}}