பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார். இது அவரது வழக்கம்தான். அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக, எம்எல்சி அதாவது மேலவை உறுப்பினராக அவர் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமார், பீகாரின் நீண்டகால முதல்வராக பதவியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1985 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து வருகிறார். இடையில், ஒருமுறை, அதாவது 1995 இல் ஹர்னாட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனாலும், அப்போது மக்களவை உறுப்பினராக இருந்ததால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

2000 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்றபோது அவர் எந்த சட்டமன்ற அவையிலும் உறுப்பினராக இல்லை. பின்னர், சட்டமன்ற மேலவை உறுப்பினராகி தனது முதல் பதவிக்காலத்தை நிறைவு செய்தார். 2005 முதல் பீகார் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், 2014-15 இல் ஒரு சிறிய இடைவெளி தவிர்த்து தொடர்ந்து பதவியில் உள்ளார். அவர் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தவிர்த்து, சட்டமன்ற மேலவை மூலம் பதவியைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
2025 பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும். இந்தத் தேர்தலிலும் அவர் போட்டியிடப் போவதில்லை. பீகார் சட்டசபைத் தேர்தலுக்கும், நிதீஷ் குமாருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். 1977, 1980 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார் நிதீஷ் குமார். இதில் 1985 இல் மட்டுமே வெற்றி பெற்றார். அதன் பிறகு, அவர் தனது கவனத்தை தேசிய அரசியலில் செலுத்தினார்.
1989, 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஆறு முறை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றார். 1989 இல் பார் தொகுதியில் தனது முதல் நாடாளுமன்ற வெற்றியைப் பெற்றார். அந்தத் தொகுதியை அடுத்த நான்கு தேர்தல்களிலும் தக்கவைத்துக் கொண்டார். 2004 ஆம் ஆண்டில், அவர் பார் மற்றும் நாளந்தா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். பார் தொகுதியில் தோல்வியடைந்தாலும், நாளந்தா தொகுதியில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலே நிதிஷ் குமார் தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிட்ட கடைசித் தேர்தலாகும்.
நிதிஷ் குமார், நவம்பர் 2005 முதல் பீகார் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். 2014-15 இல் சுமார் ஒன்பது மாதங்கள் மட்டுமே அவர் இந்தப் பதவியில் இல்லை. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, ஜிதன் ராம் மாஞ்சி முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், மாஞ்சி பாஜகவுடன் நெருக்கமாக இருந்ததால், 2015 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார்.
அதையடுத்து வந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் கூட்டணி அமைத்து வலுவான மக்கள் ஆதரவைப் பெற்றார். ஆனால், 2017 இல் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்தார்.
நாட்டில் சட்ட மேலவை மொத்தமே 6 மாநிலங்களில்தான் உள்ளது. அதில் பீகாரும் ஒன்றாகும். சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் சட்டமன்றத் தேர்தல்களில் நேரடியாகப் போட்டியிடாமலேயே அமைச்சர்களாகப் பணியாற்ற முடியும். நிதிஷ் குமாரின் முதல் மேலவை உறுப்பினர் பதவிக்காலம் 2012 இல் முடிவடைந்தது. அதன் பிறகு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Short Story: மயிலாப்பூர் மாமியும் மசால் வடையும்!
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!
கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா
Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!
{{comments.comment}}