பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்களிக்கச் செல்வோர் அடையாள அட்டை இல்லாவிட்டால், என்னென்ன ஆவணங்களை எடுத்துச் செல்லலாம் என்பது குறித்த அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதுதவிர பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியில் உள்ளது.
நாளை முதல் கட்ட வாக்குப்பதிவின்போது வாக்களிக்க உள்ளோர், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், தங்களது டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை (E-EPIC) பதிவிறக்கம் செய்யவும் முடியும். இதற்காக, தலைமை தேர்தல் அதிகாரி, பீகார் இணையதளத்திற்கு (ceoelection.bihar.gov.in) செல்ல வேண்டும். அங்குள்ள "Search in Roll" அல்லது "Elector’s Corner" பகுதியில் உங்கள் EPIC எண்ணை (Voter ID எண்) அல்லது உங்கள் பெயர், மாவட்டம், சட்டமன்ற தொகுதி போன்ற விவரங்களை உள்ளிட்டு தேடலாம்.

தேர்தல் நாளன்று வாக்களிக்கச் செல்லும்போது, அடையாளத்தை உறுதிப்படுத்த சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். வாக்காளர் அட்டை (EPIC) அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு, புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம், மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் அடையாள அட்டை ஆகியவை அடங்கும். இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும்போது எடுத்துச் செல்லலாம்.
அனல் பறக்க நடந்த முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}