Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!

Jun 30, 2025,02:46 PM IST

பாட்னா: நீங்க ஒரு அகலமான, பளபளப்பான புது ரோட்ல கார் ஓட்டிட்டு போறீங்கன்னு வச்சுக்குவோம்.. ஒரு குண்டும் குழியும்கூட இல்லை. ரெண்டு பக்கமும் அடர்த்தியா மரங்கள் நிக்குது. வண்டி ஸ்மூத்தா போகுது, காத்து முகத்துல படுது, சுத்தி இருக்கிற இயற்கை அப்படியே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு. ஆஹா, என்ன ஒரு இனிமையான பயணம்!


ஆனா, திடீர்னு இந்த மரங்கள் எல்லாம் நடு ரோட்டுக்கு வந்துட்டா என்ன ஆகும்? நினைச்சுப் பார்க்கவே தலை சுத்துதுல்ல? பைக் கேம்ல வர்ற மாதிரி, முன்னாடி வர தடைகள தாண்டிப் போகணும், இல்லைனா அவ்வளவுதான்! கற்பனையில மட்டும் இல்லங்க, இது நிஜமாவே நடந்திருக்கு. 


நம்ம பீகார்ல, பாட்னால இருந்து 50 கி.மீ தூரத்துல இருக்கிற ஜெஹானாபாத்ல தான் இந்த விபரீதம் அரங்கேறியிருக்கு. அதாவது 100 கோடி ரூபாய் செலவுல போட்ட ரோடு விரிவாக்கத் திட்டத்தில்தான் இப்படி ஒரு கூத்தைப் பண்ணிருக்காங்க. 


பாட்னா-கயா மெயின் ரோட்ல, 7.48 கி.மீ தூரத்துக்கு நடு ரோட்டுல மரங்கள் கம்பீரமா நிக்குது. இதுனால தினம் தினம் எத்தனையோ விபத்துகள். இந்த மரங்கள் எல்லாம் ஒரே நாள்ல முளைச்சுடலையே, அப்புறம் எப்படி இப்படி ஆச்சுன்னு? உங்களுக்கு கேள்வி எழும். யாருக்குமே எழத்தான் செய்யும்.


என்ன நடந்தது?




மாவட்ட நிர்வாகம் 100 கோடி ரூபா செலவுல ரோடு விரிவாக்கப் பணியை ஆரம்பிக்கும்போது, மரங்களை அகற்ற வனத்துறைகிட்ட அனுமதி கேட்டிருக்காங்க. ஆனா, வனத்துறை அவங்களோட கோரிக்கைய நிராகரிச்சுடுச்சு. அதுக்கு பதிலா, 14 ஹெக்டேர் வன நிலத்துக்கு இழப்பீடு கேட்டிருக்காங்க. மாவட்ட நிர்வாகத்தால அந்த இழப்பீட்டை கொடுக்க முடியல. 


பார்த்துச்சு மாவட்ட நிர்வாகம்.. வினோதமான ஒரு முடிவையும் எடுத்துச்சு.. அதாவது மரங்கள் எதையும் வெட்டலை, அகற்றலை. மாறாக அவற்றைச் சுத்தி ரோடு போட்டுட்டாங்க!  இந்த மரங்கள் ஒரு நேர்கோட்ல இல்லாம, அங்கொன்றும் இங்கொன்றுமா நிக்குது. டிரைவர்கள் பாவம், ஒரு ஜிக்ஜாக் ஆட்டம் போட்டுதான் ரோட்ல போகணும். 100 கோடி ரூபாய் பணத்தை இப்படி கொடூரமா கொட்டி வச்சிருக்கு மாவட்ட நிர்வாகம்.


ஏற்கனவே இந்த மரங்களால எத்தனையோ விபத்துகள் நடந்திருக்குன்னு அந்த வழியா போவோர் புலம்புகிறார்கள். மாவட்ட நிர்வாகம் மரங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கிற மாதிரி தெரியல. பீகார் ஸ்டைலே தனியாத்தாய்யா இருக்கு!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்