பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்றே கடைசி.. EC மீது எதிர்க்கட்சிகள் புகார்

Sep 01, 2025,01:10 PM IST

பாட்னா: பீகார் மாநிலத்துக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில், பெயர் சேர்க்கவும், நீக்கவும் செப்டம்பர் 1-ம் தேதியே கடைசி நாள். இந்த திருத்தப் பணியில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, பூத் அளவிலான முகவர்கள் (BLA) கொடுத்த புகார்களை தேர்தல் ஆணையம் (EC) கண்டுகொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.


இதற்கிடையே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், பெயர் சேர்க்க அவகாசத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நாளை விசாரிக்க உள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 12 அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியலில் தவறான பெயர்கள் இருப்பதாக தகவல் கொடுத்தால், சம்பந்தப்பட்ட EROக்கள் அந்த தகவலை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.




இதுவரை 33,000-க்கும் மேற்பட்டோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், பட்டியலில் தவறாக சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை நீக்கக் கோரி இருக்கிறார்கள். பீகாரில் நவம்பர் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்படும்.


மறுபக்கம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா, இந்த திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். SIR எனப்படும் சிறப்பு திருத்தப் பணியை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் எந்த புகாரும் வரவில்லை என்று செய்திகளை பரப்புகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி 89 லட்சம் புகார்களை கொடுத்துள்ளது. எங்கள் பூத் ஏஜென்டுகள் புகார் கொடுக்க சென்றபோது, தேர்தல் ஆணையம் புகாரை வாங்க மறுத்துவிட்டது. தனிநபர்கள் மட்டுமே புகார் கொடுக்க முடியும், அரசியல் கட்சிகள் புகார் கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறிவிட்டது என்றார் அவர்.


இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், முதலில் எந்த பூத் ஏஜென்ட்டும் புகார் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தது. ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் புகார்கள் சரியான முறையில் கொடுக்கப்படவில்லை என்றும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு அறிக்கை வெளியானது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்