பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்றே கடைசி.. EC மீது எதிர்க்கட்சிகள் புகார்

Sep 01, 2025,01:10 PM IST

பாட்னா: பீகார் மாநிலத்துக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில், பெயர் சேர்க்கவும், நீக்கவும் செப்டம்பர் 1-ம் தேதியே கடைசி நாள். இந்த திருத்தப் பணியில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, பூத் அளவிலான முகவர்கள் (BLA) கொடுத்த புகார்களை தேர்தல் ஆணையம் (EC) கண்டுகொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.


இதற்கிடையே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், பெயர் சேர்க்க அவகாசத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நாளை விசாரிக்க உள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 12 அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியலில் தவறான பெயர்கள் இருப்பதாக தகவல் கொடுத்தால், சம்பந்தப்பட்ட EROக்கள் அந்த தகவலை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.




இதுவரை 33,000-க்கும் மேற்பட்டோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், பட்டியலில் தவறாக சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை நீக்கக் கோரி இருக்கிறார்கள். பீகாரில் நவம்பர் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்படும்.


மறுபக்கம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா, இந்த திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். SIR எனப்படும் சிறப்பு திருத்தப் பணியை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் எந்த புகாரும் வரவில்லை என்று செய்திகளை பரப்புகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி 89 லட்சம் புகார்களை கொடுத்துள்ளது. எங்கள் பூத் ஏஜென்டுகள் புகார் கொடுக்க சென்றபோது, தேர்தல் ஆணையம் புகாரை வாங்க மறுத்துவிட்டது. தனிநபர்கள் மட்டுமே புகார் கொடுக்க முடியும், அரசியல் கட்சிகள் புகார் கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறிவிட்டது என்றார் அவர்.


இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், முதலில் எந்த பூத் ஏஜென்ட்டும் புகார் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தது. ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் புகார்கள் சரியான முறையில் கொடுக்கப்படவில்லை என்றும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு அறிக்கை வெளியானது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்

news

நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்

news

திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?

news

பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு

news

ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு

news

நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்