மாஸ்கோ: ரஷ்யா கடந்த 200 வருடங்களில் இல்லாத அளவிலான சோதனையைச் சந்தித்து வருகிறது. அதாவது அங்கு பிறப்பு விகிதம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இது வரலாறு காணாத அபாயகரமான அளவுக்கு போய் விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 200 ஆண்டுகளில் இப்படி ஒரு சரிவை ரஷ்யா சந்தித்தது இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பிறப்பு விகிதம் தொடர்பான தகவல்களை அரசு ரகசியமாக மாற்றி அதை வெளியிடக் கூடாது என்று ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தோடு நில்லாமல், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த பல வருடங்களாகவே ரஷ்யாவில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருகிறது. மக்கள் தொகையும் சரிந்து கொண்டே போகிறது. அதிலும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போருக்குப் பின்னர் பிறப்பு விகிதம் மேலும் மோசமாகியுள்ளதாம். பலர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.
அடுத்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவின் மக்கள் தொகை 13.20 கோடியாக குறைந்து போய் விடும் என்றும் கூறப்படுகிறது. இது இதுவரை இல்லாத மோசமான சரிவாகும். இது இன்னும் மோசமாகி அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 8.3 கோடி என்ற அளவுக்கு போய் விடும் என்றும் ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. அதாவ அடுத்த நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ரஷ்யர்கள் என்று ஒரு இனம் இருந்தது, இப்போது அது அழிந்து விட்டது என்று சொல்லக் கூடிய அளவுக்கு அபாயகரமான கோணத்தில் ரஷ்யாவின் மக்கள் தொகை போய்க் கொண்டுள்ளதாம்.
கடந்த மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் குழந்தை பிறப்பு விகிதம் வெறும் 4 சதவீதமாக இருந்தது. இது கடந்த 1700களின் பிற்பகுதியில் இருந்ததற்குப் பிறகு மிகவும் குறைந்த பிறப்பு விகிதமாகும். பிப்ரவரி மாதத்தில் 6 முதல் 7 சதவீதமாக இருந்த பிறப்பு விகிதம், மார்ச் மாதத்தில் அடியோடு சரிந்தது ரஷ்ய அரசை அதிர வைத்துள்ளதாம்.
2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் குழந்தை பிறப்பானது 2 லட்சத்து 94 ஆயிரமாக இருந்தது. இது கடந்த ஆண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.4 சதவீதம் குறைவாகும்.
குழந்தை பிறப்பை அதிகரிக்க ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறதாம். கருத்தடைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல குழந்தை பிறப்பு தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பெற்றுக் கொள்ள பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் பெண்களைக் கூட முன்கூட்டியே விடுதலை செய்து அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றனராம்.
உலகின் மிகப் பெரிய நாடு ரஷ்யா என்பது நினைவிருக்கலாம். ஆனால் அங்கு குழந்தை பிறப்பு அடியோடு சரிந்து வருவது உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரபிக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு..!
அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஏன்?.. அரசு தரும் விளக்கம்
கன்னடம் பேச முடியாது என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி அதிரடியாக பணியிட மாற்றம்
வளையங்குளம் துயர நிகழ்வு.. இதுதான் இந்தியாவே வியக்கும் திமுக அரசின் 4 ஆண்டு காலச் சாதனையா? : சீமான்
மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேணும்.. பசங்களைப் பார்த்துக்கணும்.. ஆர்த்தி ரவி அதிரடி டிமாண்ட்!
எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
ரீவிசிட் அடிக்கிறதா கொரோனா.. நிலவரம் என்ன?.. டாக்டர் பரூக் அப்துல்லா சொல்வதைக் கேளுங்க!
தமிழ்நாட்டின் நிதி உரிமையை வெளிப்படுத்த.. 24ம் தேதி டெல்லி செல்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}