தேர்தலில் போட்டியிடாதது ஏன்?.. இதுதாங்கண்ணா காரணம்.. வேற ஒன்னும் இல்லை.. அண்ணாமலை விளக்கம்

Apr 04, 2026,05:07 PM IST

சென்னை: பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏன் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறித்த பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை தற்போது சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.


முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு :


தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்தத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்பதை ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டேன். அதுமட்டுமின்றி, பாஜகவின் மத்திய குழு (Core Committee) கூட்டத்திலும் இதனை நான் உறுதிப்படுத்தியிருந்தேன்" என்றார்.


கோவை தொகுதி குறித்து விளக்கம் :




குறிப்பாக கோவை தொகுதியில் அவர் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்தும் அவர் பேசியுள்ளார். "கோவையில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதுதான் முறை. நான் எந்தத் தொகுதியையும் கேட்டுப் பெறவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தொகுதிகளுக்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ தான் கட்சிக்குள் நெருக்கடி கொடுக்கவில்லை என்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்.


எனது பணி பிரசாரம் செய்வது மட்டுமே:


தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தைப் பட்டியலிட்ட அண்ணாமலை, தனது தற்போதைய இலக்கு என்ன என்பதையும் குறிப்பிட்டுள்ளார். "சட்டமன்றத் தேர்தலில் வரும் 23-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்து, கட்சிக்கு வலு சேர்ப்பதுதான் எனது தற்போதைய முதன்மையான பணி. காலம் இன்னும் இருக்கிறது; காட்சிகள் மாறும். நிறைய தேர்தல்கள் வரத்தான் போகிறது. தேர்தலில் போட்டியிடாதது குறித்த முழுமையான விளக்கங்களை மே மாதம் 4-ஆம் தேதிக்குப் பிறகு விரிவாகப் பேசலாம்." என்று அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.


அரசியல் முக்கியத்துவம் : 

தமிழக பாஜகவின் முகமாகப் பார்க்கப்படும் அண்ணாமலை, ஒரு 'முன்னாள்' தலைவர் என்ற நிலையில் இருந்தாலும், கட்சியின் தேர்தல் வியூகங்களில் அவரது பங்கு தவிர்க்க முடியாததாக உள்ளது. அவர் தேர்தலைத் தவிர்த்து விட்டு பிரசாரத்தில் கவனம் செலுத்துவது, கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க உதவும் என ஒரு தரப்பினரும், அவர் நேரடியாகப் போட்டியிடாதது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தும் என மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். மே 4-ஆம் தேதி அவர் அளிக்கப்போகும் அந்த "விரிவான விளக்கம்" தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்