சென்னை: தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன் கடந்த 15ம் தேதி உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று சென்ற அண்ணாமலை, இல.கணேசனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மறைந்த இல. கணேசனுக்கு பாஜக சார்பில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகழஞ்சலி நிகழ்விற்கான அழைப்பிதழையும் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார் அண்ணாமலை.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நிச்சயமாக அவர் வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார். தமிழ்நாட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது எங்கள் கட்சியின் விருப்பம்.

இந்தியா கூட்டணி வேட்பாளரும் நல்ல வேட்பாளர் தான். தமிழக முதலமைச்சர் இந்திய கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இன்னும் நேரம் உள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தில் இருந்து ஒருமித்த ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. தமிழருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் எல்லோரும் மாநாடு நடத்த உரிமை உள்ளது. தவெக ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறது. செயல்படட்டும். விஜய் நடத்தும் மாநாட்டிற்கும், விஜய்க்கும் வாழ்த்துக்கள். பாஜகவை பொறுத்தவரை, மக்களின் குரலை தேசிய ஜனநாயகக் கூட்டணி பேசி வருகிறது. திமுகவிற்கு மாற்றாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமரும் என்று மக்கள் பேசி வருகிறார்கள். மக்கள் எங்களின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}