சென்னை: தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன் கடந்த 15ம் தேதி உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று சென்ற அண்ணாமலை, இல.கணேசனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மறைந்த இல. கணேசனுக்கு பாஜக சார்பில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகழஞ்சலி நிகழ்விற்கான அழைப்பிதழையும் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார் அண்ணாமலை.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நிச்சயமாக அவர் வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார். தமிழ்நாட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது எங்கள் கட்சியின் விருப்பம்.
இந்தியா கூட்டணி வேட்பாளரும் நல்ல வேட்பாளர் தான். தமிழக முதலமைச்சர் இந்திய கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இன்னும் நேரம் உள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தில் இருந்து ஒருமித்த ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. தமிழருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் எல்லோரும் மாநாடு நடத்த உரிமை உள்ளது. தவெக ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறது. செயல்படட்டும். விஜய் நடத்தும் மாநாட்டிற்கும், விஜய்க்கும் வாழ்த்துக்கள். பாஜகவை பொறுத்தவரை, மக்களின் குரலை தேசிய ஜனநாயகக் கூட்டணி பேசி வருகிறது. திமுகவிற்கு மாற்றாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமரும் என்று மக்கள் பேசி வருகிறார்கள். மக்கள் எங்களின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
130-வது அரசியலமைப்புத் திருத்தம்.. இது கறுப்பு தினம்.. கறுப்புச் சட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சரிந்து விழுந்த தவெக 100 அடி கொடிக் கம்பம்.. பதை பதைத்துப் போன மாநாட்டுக் களம்
என்னாது... இளநீர் குடித்தால் கிட்னிக்கு ஆபத்தா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
தவெக மாநாட்டிற்கு முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து!
ஷாருக் கானிடமிருந்து சிவகார்த்திகேயனை வந்தடைந்த மதராஸி.. சுவாரஸ்ய தகவல்!
பாஜக.வின் புதிய மசோதாவால் தமிழ்நாட்டு அமைச்சர்கள் பதவிக்கு ஆபத்து வருமா?
குத்தகைக்கு ஓட்டுனர், நடத்துனர் நியமனம்...சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்: டாக்டர் அன்புமணி
திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!
மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ
{{comments.comment}}