டில்லி : ஏப்ரல் 19ம் தேதி துவங்கிய லோக்சபா தேர்தல் 2024 ஓட்டுப்பதிவுகள் இன்றுடன் (ஜூன் 01) நிறைவடைந்துள்ளன. மொத்தம் ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதிலும் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளன.
இதில் பதிவான ஓட்டுக்கள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் ஓட்டுப்பதிவுகள் முழுவதுமாக நிறைந்து விட்டதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை இன்று பல்வேறு மீடியாக்களும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் எக்ஸ் தள டிரெண்டிங் முழுவதிலும் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஹேஷ்டேக்குகளே ஆக்கிரமித்துள்ளன.
#ExitPoll, #ElectionResults, #BJP 320, #My Prediction, NDA 370, உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாக துவங்கி உள்ளன. நாடே லோக்சபா தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகி உள்ளது. தேர்தலில் வெல்லப் போவது யார், ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உருவாகி உள்ளது. இதனால் தேசிய அளவில் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
எக்சிட் போல் முடிவுகளை சில கட்சிகள் இப்போதே வெற்றி பெற்று விட்டது போல கொண்டாடத் தொடங்கி விட்டன. குறிப்பாக பாஜகவினர்தான் அதீதமாக களமாடி வருகின்றனர். பாஜகவுக்கு மாபெரும் வெற்றி என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி டிவீட் போட்டிருக்கிறார். இதேபோல பாஜக ஏதோ ஆட்சியைப் பிடித்து விட்டது போல எக்ஸ் தளத்தில் அக்கட்சியினர் இப்போதே கொண்டாட்டமாக டிவீட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பாஜகவினர் எக்சிட் போல் முடிவுகளை வைத்து அதையே பிரச்சாரமாக்க முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறியிருந்தன. கிட்டத்தட்ட அதுபோலதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கரூர் துயர சம்பவம்... ஹேமமாலினி தலைமையில்... தேஜ கூட்டணியில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு
கரூர் கூட்ட நெரிசல்.. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது.. சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி
கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
யாரைக் குறை கூறுவது...?? யார் மீது குற்றம் சாட்டுவது..?? மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??
{{comments.comment}}