டில்லி : ஏப்ரல் 19ம் தேதி துவங்கிய லோக்சபா தேர்தல் 2024 ஓட்டுப்பதிவுகள் இன்றுடன் (ஜூன் 01) நிறைவடைந்துள்ளன. மொத்தம் ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதிலும் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளன.
இதில் பதிவான ஓட்டுக்கள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் ஓட்டுப்பதிவுகள் முழுவதுமாக நிறைந்து விட்டதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை இன்று பல்வேறு மீடியாக்களும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் எக்ஸ் தள டிரெண்டிங் முழுவதிலும் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஹேஷ்டேக்குகளே ஆக்கிரமித்துள்ளன.
#ExitPoll, #ElectionResults, #BJP 320, #My Prediction, NDA 370, உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாக துவங்கி உள்ளன. நாடே லோக்சபா தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகி உள்ளது. தேர்தலில் வெல்லப் போவது யார், ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உருவாகி உள்ளது. இதனால் தேசிய அளவில் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
எக்சிட் போல் முடிவுகளை சில கட்சிகள் இப்போதே வெற்றி பெற்று விட்டது போல கொண்டாடத் தொடங்கி விட்டன. குறிப்பாக பாஜகவினர்தான் அதீதமாக களமாடி வருகின்றனர். பாஜகவுக்கு மாபெரும் வெற்றி என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி டிவீட் போட்டிருக்கிறார். இதேபோல பாஜக ஏதோ ஆட்சியைப் பிடித்து விட்டது போல எக்ஸ் தளத்தில் அக்கட்சியினர் இப்போதே கொண்டாட்டமாக டிவீட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பாஜகவினர் எக்சிட் போல் முடிவுகளை வைத்து அதையே பிரச்சாரமாக்க முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறியிருந்தன. கிட்டத்தட்ட அதுபோலதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}