தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

May 08, 2026,03:23 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது நடந்து வரும் எந்த அரசியல் செயல்பாட்டிலும் பாஜகவுக்குத் தொடர்பில்லை என்று அவர் விளக்கியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி, அதே நோக்கத்துடன் சட்டமன்றத் தேர்தலிலும் களம் கண்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகளைக் கட்சியானது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது.




தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும், அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம்.


தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை.  மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து இதுவரை பாஜக தரப்பிலிருந்து யாருமே பேசவில்லை. வழக்கமாக எல்லாப் பிரச்சினைக்கும் கருத்து தெரிவிக்கும் அண்ணாமலை கூட அமைதி காத்து வருகிறார். இந்த நிலையில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

news

GenZ effect: அடியோடு மாறுது உலகம்.. இது மாற்றமா? ஏமாற்றமா?

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைத்தால்.. விஜய் எடுக்க போகும் அடுத்த அதிரடி முடிவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்