NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

Jan 22, 2026,07:15 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் வலிமையாக உருவாகிக்கொண்டிருக்கும் NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், திமு.கவுக்கு ஒத்து ஊதும் இயக்கமாக கம்யூனிஸ்ட் மாறிவிட்டது. கறிக்கோழி பிரச்சனைக்கு திமுக அரசே காரணம். ஓ.பி.எஸ்சைப் பொறுத்தவரை அவர் ஒரு பெரிய தலைவர். நல்ல மனிதர். சத்தியச் சோதனை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவர். தமிழ்நாட்டில் மிக முக்கியமான தலைவர்.
அரசியலில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது





டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்ன என்பது நன்றாகவே எனக்கு தெரியும்.அவருக்குக் கோபம் இருந்தாலும்கூட, மோடியை விட்டுப் போகக்கூடிய மனிதர் அவர் அல்ல. சில மனக்கசப்பு காரணமாக தற்காலிகமாக அவர் கூட்டணியில் இருந்து விலகி இருந்திருக்கலாம். அவர் நம்முடன் தான் மீண்டும் இணைவார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்பதற்காக சில கசப்பான விஷயங்களை எல்லாம் மறந்து தினகரன் அண்ணன் கூட்டணிக்கு வந்திருக்கிறார்.

ரஹ்மான் ஓர் இசை மேதை. தமிழ்நாட்டின் அடையாளம் அவர். எங்கு சென்றாலும் மேடைகளில் தமிழ்தான் பேசுவார். அவர் அளித்த பேட்டியில் சில விஷயங்களை எடுத்து திரித்து அங்கும் இங்கும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. 'ராமாயணா' படத்திற்கு அவர்தான் இசையமைக்கிறார். எல்லாவிதமான படங்களுக்கும் அவர் இசையமைக்கிறார். சினிமாத் துறையில் பவர் ஷிஃப்ட் எப்படி மாறி இருக்கிறது என்றுதான் அவர் கூறியிருந்தார். அது அவருடைய கருத்து. அவருடைய ரசிகன் நான். அவர் கருத்து சர்ச்சையான நிலையில் விளக்கம் கொடுத்துவிட்டார். இதில் கனிமொழி அக்காவிற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

டி.டி.வி.தினகரன் குறித்து எதுவும் தெரியாமல் செல்வப்பெருந்தகை பேச வேண்டாம். மூழ்கிக்கொண்டிருக்கும் அவர்களது கூட்டணியையும், ஆட்சியையும் காப்பாற்றுவது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் வலிமையாக உருவாகிக்கொண்டிருக்கும் NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து பேச அவர் யார். ஏன் அவர் பேச வேண்டும்? என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!

news

கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

news

இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!

news

ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

news

பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!

news

அபிஷேக் - சஞ்சு சாம்சன் அதிரிபுதிரி ஆட்டம்.. பாகிஸ்தான் உலக சாதனையை முறியடித்த இந்தியா!

அதிகம் பார்க்கும் செய்திகள்