இது ஒரு தொடர்கதை.. இதற்கில்லை முடிவுரை.. நொந்து கொண்ட நாராயணன் திருப்பதி.. என்னாச்சு?

Dec 04, 2023,05:42 PM IST

சென்னை: பணத்துக்காக சொத்தை உருவாக்கிய அரசியல்வாதிகளை, அதிகாரிகளை நொந்து கொள்வதா? அல்லது சொத்துக்காக பணத்தை இழந்த பொது மக்களை நொந்து கொள்வதா? அரசியல்வாதிகளின் ஊழல் இது ஒரு தொடர்கதை .. இதற்கில்லை முடிவுரை என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


மிச்சாங் புயல் பேய் மழையாக உருவெடுத்து, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அசுரத்தனமாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் ஒவ்வொரு ஏரியாவும் ஏரியாக மாறி நிற்கிறது. கடல் உள்ளே புகுந்து விட்டதா என்று சந்தேகப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.


இந்த நிலையில் சென்னையின் அவல நிலை குறித்து நாராயணன் திருப்பதி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




கடந்த 50 வருடங்களில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர் தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். நீர் போகும் பாதைகளை ஆக்கிரமித்து அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி பல்லாயிரம் கோடிகளை பெருக்கிக் கொண்டனர். சென்னைவாசிகளோ, சொந்த வீட்டு  கனவில், அவை ஆக்கிரமிப்பில், நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ளன என்பது தெரிந்தும் தங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து விட்டு பெருமழை பெய்யும் போது இன்னலுக்குள்ளாகும் போது அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் நொந்து கொள்வது காலம் கடந்த செயல். 


நீதிமன்றங்கள் நீர்நிலைகளை அகற்ற உத்தரவிடும் போது, கையூட்டு கொடுத்தாவது தங்களின் சொத்தை காப்பாற்றி கொள்ள அதே அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள் சென்னை வாசிகள். இது ஒரு தொடர்கதை. இதற்கில்லை முடிவுரை.


நேற்றிலிருந்து பெய்து வரும் மழையினை எதிர்கொண்டு சமாளிப்பது மிக கடினமான காரியமே. இயற்கையின் சீற்றத்தை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. கடந்த இரண்டரை வருடங்களில், சென்னையில், மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்க தோண்டிய சாலைகளை, தெருக்களை சீரமைக்காமல் பள்ளங்கள், குழிகளோடு கைவிடப்பட்ட சாலைகளால், தெருக்களால் தான் இன்றைய சீர்கேடு என்பதை அரசு உணர வேண்டும். மழைநீர் வடிகால்வாய்கள் பல தெருக்களில் சாலைகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. இனியாவது சென்னையில் சாலைகளை அமைக்க ஆவன செய்ய வேண்டும் அரசு என கூறியுள்ளார் நாராயணன் திருப்பதி.


அவர் சொல்வதில் பாதி உண்மை உள்ளது. பல நீர் நிலைகளை ஆக்கிரமித்துத்தான் இன்றைய சென்னையின் பெரும் பகுதி உள்ளது. மக்கள் சரமாரியாக விவசாய நிலங்களை பிளாட் போட்டும், கால்வாய்களை ஆக்கிரமித்து வீடு கட்டியும் சென்னை நகரின் ஏரிகளிலிருந்து கடலுக்குச் செல்லும் நீரை மறித்து குழப்பி விட்டதால்தான் இன்று தண்ணீர் போக வழியில்லாமல் எல்லாம் வீட்டுக்குள்ளும், ரோட்டிலும் போய்க் கொண்டுள்ளன.


ஏரி ஆக்கிரமிப்பு, கால்வாய் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்தியும், அபகரிக்கப்பட்ட கால்வாய்களையும் ஏரி போக்கு இடங்களையும் மீட்டு நீர் நிலைகளிலிருந்து உபரி நீர் சரியான பாதையில் செல்வதை உறுதி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் சென்னையில் கொஞ்சமாச்சும் மக்கள் குடியிருக்க முடியும். இல்லாவிட்டால் ஊரைக் காலி செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்