கோவை : தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 90 நாட்களே உள்ள நிலையில், ஆளும் திமுக அரசைத் தோற்கடிக்க பாஜக பூத் லெவல் (Booth level) தீவிர களப்பணியைத் தொடங்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் நபின், அடுத்த 90 நாட்களுக்கு பாஜக தொண்டர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று மத்திய அரசின் சாதனைகளையும், திமுக அரசின் தோல்விகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "பூத்களை வென்றால், தேர்தலை வெல்லலாம்" என்ற தாரக மந்திரத்துடன் செயல்படுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

திமுக அரசின் ஊழல், வாரிசு அரசியல் மற்றும் நிர்வாகத் தோல்விகளில் மூழ்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, சனாதன விரும்பிகளை அவமதிப்பதும், போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதும் தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்தார். மோசமான சாலைகள், குடிநீர் தட்டுப்பாடு போன்ற உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து பாஜக தொண்டர்கள் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து அதிக கவனம் செலுத்தி, பெண்களை மையப்படுத்திய பிரச்சாரங்களை முன்னெடுக்க நிதின் நபின் உத்தரவிட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அடிமட்ட அளவில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனவரி 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த வருகை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது கன்னியாகுமரியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தி, பிரதமருடன் ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையேற்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை காட்டவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் மேற்கொள்ளவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}