சென்னை: தமிழக இளைஞர்கள் கண் முன்னே சீரழிந்து போவதையும், சட்டம் ஒழுங்கு சிதைந்து பாதுகாப்பு பறிபோவதையும் கண்ணாரக் கண்கின்றனர் தமிழக மக்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதை கும்பல் ஒன்று பட்டாக் கத்தி கொண்டு கொடூரமாகத் தாக்கியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

வடமாநிலத் தொழிலாளி, சேலை வியாபாரி, கல்லூரி இளைஞர்கள் எனத் தொடர்ச்சியாகப் பொதுமக்கள் அனைவரும் போதை கும்பலின் கொலைவெறித் தாக்குதலில் பலிகடாவாகி வருவது கஞ்சாவின் கைப்பிடியில் திருவள்ளூர் சிக்கியிருப்பதைத் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதிலும், தொடர்ந்து இது போன்ற கோர நிகழ்வுகளில் ஈடுபடுவது, போதை மருந்தின் ஆதிக்கத்தில் உள்ள இளைஞர்கள் தான் என்பதை உற்று நோக்கையில் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
உண்மையில், திருத்தணியில் நடக்கும் போதை வன்முறைகள் ஒரு சிறு துளியே! தமிழகம் முழுவதும் டாஸ்மாக், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் நடக்கும் வன்முறைகளும் குற்றங்களும் இதைக்காட்டிலும் வரைமுறையற்றது!
ஃபோட்டோஷூட் திமுக ஆட்சியில் போதைக் கலாச்சாரத்தால் தமிழக இளைஞர்கள் கண் முன்னே சீரழிந்து போவதையும், சட்டம் ஒழுங்கு சிதைந்து பாதுகாப்பு பறிபோவதையும் கண்ணாரக் கண்ட தமிழக மக்கள் அறிவாலயத்தை இனி என்றும் ஆட்சி அரியணையில் அமர்த்தமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}