சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களிலும் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நசகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு காலமே உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அதன் பணிகளை விறுவிறுப்பாக செய்ய தொடங்கி விட்டது. இந்நிலையில் மத்தியில் இருக்கும் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் பணிகளை செய்யத்தொடங்கிய நிலையில், பாஜகவினர் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாதகவை கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், சமீபத்தில் சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சென்று சந்தித்து பேசியிருந்தார் என்றும், அதன் பின்னர் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலையும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். அத்துடன் ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் பேசியும் விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர். இந்த இரு நிகழ்ச்சிகளால் பாஜகவுடன் நாதக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணிக்காக நாம் தமிழர் கட்சிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களிலும் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜகவின் இந்த அழைப்பை சீமான் ஏற்பாரா? அல்லது முந்தைய தேர்தல்களை போலவே நாம் தமிழர் கட்சி தனித்து நின்று போட்டியிடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}