சென்னை: கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பாஜக.,வின் கோரிக்கைகளை ஏற்க ஓபிஎஸ் தொடர்ந்து மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதிமுக இரண்டாக பிளவுபட்ட பிறகு, கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம். அந்த தேர்தலில் ஓபிஎஸ்.,க்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வியை சந்தித்தார். இருந்தும் தொடர்ந்து பாஜக.,வில் தான் இருந்து வந்தார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக அமைதி காத்து வந்த ஓபிஎஸ், சமீபத்தில் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியை வரவேற்கவும், வழியனுப்பி வைக்கவும் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமருக்கே கடிதம் அனுப்பி இருந்தார். இருந்தாலும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

ஓபிஎஸ்.,க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்று, பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ்., கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு ஓபிஎஸ் முன்வைத்த பல கோரிக்கைகளை ஏற்க பாஜக தலைமை மறுத்து விட்டதால் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
இப்படி பலவிதமான குழப்பங்கள் நடந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்று சந்தித்தார். அதுவும் ஒரே நாளில் 2 முறை சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போதும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்த நண்பனும் இல்லை என கூறியது திமுக கூட்டணியில் அவர் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் பாஜக சார்பில் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்.,ஐ சமாதானப்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் ஓபிஎஸ்.,ஐ பாஜக கேட்டு வருகிறதாம். ஓபிஎஸ் கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்தது போல், தற்போது பாஜக.,வின் கோரிக்கைகளை ஏற்க ஓபிஎஸ் மறுத்து வறுகிறாராம். ஒன்றுபட்ட அதிமுக அமையும் வரை பிரதமரை சந்திக்க போவதில்லை என ஓபிஎஸ் உறுதியாக சொல்லி விட்டாராம்.
இதனால் ஓபிஎஸ் அடுத்து என்ன முடிவு எடுப்பார்? அதிமுக அதிருப்தி ஓட்டுக்களை அள்ளுவதற்காக ஓபிஎஸ்.,ஐ தங்கள் கூட்டணியில் இணைக்க திமுக தீவிரம் காட்டுமா? ஓபிஎஸ்.,ஐ சமாதானப்படுத்தி, கூட்டணியில் மீண்டும் இணைக்க பாஜக என்னென்ன முயற்சிகளில் ஈடுபடும்? என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதனால் அரசியல் களத்தில் அடுத்து என்ன நடக்கும் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, மீண்டும் ஆகஸ்ட் 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமருடன், ஓபிஎஸ்.,ஐ சந்திக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}