கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?

Aug 01, 2025,07:30 PM IST

சென்னை: கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பாஜக.,வின் கோரிக்கைகளை ஏற்க ஓபிஎஸ் தொடர்ந்து மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது.


அதிமுக இரண்டாக பிளவுபட்ட பிறகு, கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம். அந்த தேர்தலில் ஓபிஎஸ்.,க்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வியை சந்தித்தார். இருந்தும் தொடர்ந்து பாஜக.,வில் தான் இருந்து வந்தார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக அமைதி காத்து வந்த ஓபிஎஸ், சமீபத்தில் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியை வரவேற்கவும், வழியனுப்பி வைக்கவும் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமருக்கே கடிதம் அனுப்பி இருந்தார். இருந்தாலும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.




ஓபிஎஸ்.,க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்று, பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ்., கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு ஓபிஎஸ் முன்வைத்த பல கோரிக்கைகளை ஏற்க பாஜக தலைமை மறுத்து விட்டதால் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. 


இப்படி பலவிதமான குழப்பங்கள் நடந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்று சந்தித்தார். அதுவும் ஒரே நாளில் 2 முறை சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போதும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்த நண்பனும் இல்லை என கூறியது திமுக கூட்டணியில் அவர் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதை உறுதிப்படுத்தியது. 


இந்த நிலையில் பாஜக சார்பில் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்.,ஐ சமாதானப்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் ஓபிஎஸ்.,ஐ பாஜக கேட்டு வருகிறதாம். ஓபிஎஸ் கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்தது போல், தற்போது பாஜக.,வின் கோரிக்கைகளை ஏற்க ஓபிஎஸ் மறுத்து வறுகிறாராம். ஒன்றுபட்ட அதிமுக அமையும் வரை பிரதமரை சந்திக்க போவதில்லை என ஓபிஎஸ் உறுதியாக சொல்லி விட்டாராம்.


இதனால் ஓபிஎஸ் அடுத்து என்ன முடிவு எடுப்பார்? அதிமுக அதிருப்தி ஓட்டுக்களை அள்ளுவதற்காக ஓபிஎஸ்.,ஐ தங்கள் கூட்டணியில் இணைக்க திமுக தீவிரம் காட்டுமா? ஓபிஎஸ்.,ஐ சமாதானப்படுத்தி, கூட்டணியில் மீண்டும் இணைக்க பாஜக என்னென்ன முயற்சிகளில் ஈடுபடும்? என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதனால் அரசியல் களத்தில் அடுத்து என்ன நடக்கும் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


இதற்கிடையே, மீண்டும் ஆகஸ்ட் 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமருடன், ஓபிஎஸ்.,ஐ சந்திக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்