கூட்டணி ஆட்சியாக இருந்தாலும்.. பிரதமர் மோடியின் கெத்து குறைந்து விடக் கூடாது.. பாஜக முடிவு!

Jun 06, 2024,10:08 PM IST

டெல்லி: கூட்டணி ஆட்சி அமைத்தாலும் கூட பிரதமர் மோடி எப்போதும் போல கெத்தாக இருக்க வேண்டும். அவரது கட்டுப்பாட்டில்தான் ஆட்சி இருக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாகவும், கவனமாகவும் இருக்கிறதாம். அதில் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் பாஜக கூறியுள்ளதாம்.


மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளது. பிரதமராக 3வது முறையாக பதவியேற்கவுள்ளார் நரேந்திர மோடி.




இந்த ஆட்சி அமைவதில் சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் முக்கிய புள்ளிகளாக உருவெடுத்துள்ளனர். இவர்களது ஆதரவு அரசு நீடிக்க மிக முக்கியம் என்பதால்  பாஜக இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் கூட எப்போதும் பிரதமருக்கு அருகில் அமர்ந்திருக்கும் அமித்ஷா, கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு, பிரதமர் அருகில் நாயுடுவும், அவருக்கு அருகில் நிதீஷ் குமாரும் அமர்ந்திருந்தனர்.


இந்த நிலையில் தற்போது கூட்டணிக் கட்சிகள் பாஜகவிடம், முக்கிய இலாகாக்களை கேட்டு டிமாண்ட் செய்ய ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதாதளமும் முக்கிய இலாகாக்களை கேட்டுள்ளனவாம். அதேபோல குமாரசாமி கட்சியும் முக்கிய இலாகாவைக் கேட்டுள்ளதாம். பவன் கல்யாணுக்கும் ஏதாவது கொடுத்தாக வேண்டும். கூட்டணி ஆட்சி என்பதாலும், கூட்டணி பலம் இல்லாமல் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது, நீடிக்க முடியாது என்பதாலும், பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இருப்பினும் பாஜக தரப்பில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதாவது எந்தக் காரணத்தைக் கொண்டும் முக்கிய இலாகாக்களை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுப்பதில்லை. குறிப்பாக நிதித்துற, உள்துறை போன்றவை. அதேபோல கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தங்களுக்கு ரொம்பவும் இறங்கிப் போய் விடக் கூடாது என்பதிலும் பாஜக கவனமாக இருக்கிறதாம். இதை விட முக்கியமாக, பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில்தான் ஆட்சி இருக்கும், இருக்க வேண்டும். அவரது கெத்து குறைந்து விடக் கூடாது. அது குறையவும் அனுமதிக்கக் கூடாது என்பதில் பாஜக கவனமாக உள்ளதாம்.


இதைக் கூட்டணிக் கட்சிகளுக்கும் கூட பாஜக தப்பில் டீசன்ட்டாக சொல்லி விட்டார்களாம். பிரதமர் மவுசு குறையாமல் இருந்தால்தான் பொதுமக்கள் மத்தியில் அரசு மீது ஒரு மரியாதை இருக்கும். மோடிக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது.. உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் மோடிக்கு என்று ஒரு தனி கவுரவம் உள்ளது. அது குறைந்து விட்டால் நாட்டுக்கே பெரும் பாதகமாகி விடும் என்பதால் இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள தயாரில்லை என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறதாம்.


ஆனால் கூட்டணி அரசியலில் இதை எப்படி அவர்கள் மேனேஜ் செய்யப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். மன்மோகன் சிங் அரசுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 10 வருடத்திற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் மத்தியில் கூட்டணி அரசு அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் அரசு முழுமையாக கூட்டணி அரசாகவே தனது முழுப் பதவிக்காலத்தையும் முடித்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்