அருணாச்சல் பிரதேசத்தில்.. தேர்தலே நடக்காமல்.. அதுக்குள்ள 10 தொகுதிகளை வென்று விட்ட பாஜக.. எப்புர்ரா!

Mar 31, 2024,06:16 PM IST

இடாநகர்: அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பதால் அங்கு அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 


முதல்வர் பேமா கந்து,  முக்தோ  தொகுதியிலிருந்தும், துணை முதல்வர் செளம்னா மெயின், செளகாம் தொகுதியிலிருந்தும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அருணாச்சல் பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அதில் அதற்குள்ளாகவே 10 தொகுதிகளை பாஜக வென்றிருக்கிறது. இருப்பினும் ஒரு சாதனையை முறியடிக்க தவறி விட்டது பாஜக.


கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி இங்கு 11 தொகுதிகளில் போட்டியின்றி வென்றிருந்தது. அந்த சாதனையை பாஜக முறியடிக்க முடியாமல் போய் விட்டது.  ஐந்து தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மற்ற  5 தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்த பாஜக போட்டி வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் மொத்தம் 10 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.




முதல்வர், துணை முதல்வர் தவிர போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற எட்டு பேர் விவரம்: ரட்டு டெச்சி (சாகலீ தொகுதி), ஜிக்கே டாகோ (தலி), நியாடோ துகாம் (தலிஹா), மட்சு மித்தி (ரோயிங்), ஹாகே அப்பா (ஜிர்ஜோ ஹபோலி), டெச்சி காசோ (இடாநகர்), டோங்க்ரு சியோங்ஜு (பொம்டிலா), தசங்லு புல் (ஹயலியாங்).


இதுகுறித்து முதல்வர் பேமா கந்து கூறுகையில், மக்கள் எங்கள் மீதம், மோடி கியாரண்டி மீதும் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் அன்பின் வெளிப்பாடே இது என்று கூறியுள்ளார். இந்த பத்து தொகுதிகள் மட்டுமல்ல, மீதமுள்ள  50 தொகுதிகளையும் கூட பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். அதேபோல அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளையும் கூட பாஜகவே வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இதில் என்ன விசேஷம் என்றால் இதே முதல்வர் பேமா கந்து, கடந்த 2014 தேர்தலிலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். அப்போது அவர் காங்கிரஸ் சார்பில் வென்றார்.. இப்போது பாஜக சார்பில் வென்றுள்ளார்


சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்