மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதைத் தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கொலை மிரட்டல் சட்டிஸ்கர் மாநிலத்திலிருந்து வந்துள்ளது.
பாலிவுட்டின் முக்கிய நாயகர்களில் ஒருவரான சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல்கள் இருந்து வருகின்றன. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து அவரை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களால் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இவர் சல்மான் கான், ஷாருக் கானின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலையைத் தொடர்ந்து தற்போது சல்மான் கானுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலிருந்து தொலைபேசி அழைப்பு மூலம் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் மும்பை பந்த்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டலைத் தொடர்ந்து மும்பையிலிருந்து ஒரு போலீஸ் படை, சட்டிஸ்கருக்கு விரைந்துள்ளது.
பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுக்கு அடுத்தடுத்து இப்படி கொலை மிரட்டல் விடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக் கானுக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்க மும்பை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே சல்மான் கானுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
{{comments.comment}}