ஷாருக்கானுக்கு சட்டிஸ்கரிலிருந்து வந்த கொலை மிரட்டல்.. ஒய் பிளஸ் பாதுகாப்புக்கு உத்தரவு!

Nov 07, 2024,03:17 PM IST

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதைத் தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கொலை மிரட்டல் சட்டிஸ்கர் மாநிலத்திலிருந்து வந்துள்ளது.


பாலிவுட்டின் முக்கிய நாயகர்களில் ஒருவரான சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல்கள் இருந்து வருகின்றன. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து அவரை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களால் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இவர் சல்மான் கான், ஷாருக் கானின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்தக் கொலையைத் தொடர்ந்து தற்போது சல்மான் கானுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலிருந்து தொலைபேசி அழைப்பு மூலம் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  2 பிரிவுகளின் கீழ் மும்பை பந்த்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டலைத் தொடர்ந்து மும்பையிலிருந்து ஒரு போலீஸ் படை, சட்டிஸ்கருக்கு விரைந்துள்ளது. 


பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுக்கு அடுத்தடுத்து இப்படி கொலை மிரட்டல் விடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக் கானுக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்க மும்பை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே சல்மான் கானுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்