ஷாருக்கானுக்கு சட்டிஸ்கரிலிருந்து வந்த கொலை மிரட்டல்.. ஒய் பிளஸ் பாதுகாப்புக்கு உத்தரவு!

Nov 07, 2024,03:17 PM IST

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதைத் தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கொலை மிரட்டல் சட்டிஸ்கர் மாநிலத்திலிருந்து வந்துள்ளது.


பாலிவுட்டின் முக்கிய நாயகர்களில் ஒருவரான சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல்கள் இருந்து வருகின்றன. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து அவரை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களால் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இவர் சல்மான் கான், ஷாருக் கானின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்தக் கொலையைத் தொடர்ந்து தற்போது சல்மான் கானுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலிருந்து தொலைபேசி அழைப்பு மூலம் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  2 பிரிவுகளின் கீழ் மும்பை பந்த்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டலைத் தொடர்ந்து மும்பையிலிருந்து ஒரு போலீஸ் படை, சட்டிஸ்கருக்கு விரைந்துள்ளது. 


பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுக்கு அடுத்தடுத்து இப்படி கொலை மிரட்டல் விடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக் கானுக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்க மும்பை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே சல்மான் கானுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்