தொடர் கதையாகும் வெடிகுண்டு புரளிகள்.. மதுரையின் பிரபல பள்ளிக்கு வந்த மெயில்.. அச்சத்தில் மாணவர்கள்!

Oct 08, 2024,03:32 PM IST

மதுரை:  மதுரையில் கடந்த சில நாட்களாகவே  பல பள்ளிகளில் வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று பிரபல தனியார் பள்ளியான டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அச்சத்தில் உறைந்தனர். 


சமீப காலமாக தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் அதிக அளவில் நடைபெறுகிறது. குறிப்பாக பள்ளிகளைக் குறி வைத்து தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. பெரும்பாலான மிரட்டல்கள் இ மெயிலில்தான் வருகின்றன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெற்றோர்கள், பிள்ளைகள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.




கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை ரிங் ரோட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளி மற்றும் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கும் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளிக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த பெற்றோர்கள் உடனே பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்துச் சென்றனர்.  இதனை அடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் என பலரும் சோதனையில் ஈடுபட்டனர். 


வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் சில நாட்களுக்கு முன்பு  நட்சத்திர விடுதிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது அடங்கிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடந்துள்ளது.


மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள பிரபல டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவர்களை பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தி வெளியே அமர வைத்தனர். பின்னர் பெற்றோர்களுக்கு குழந்தைகளை வந்து அழைத்துச் செல்லுமாறு அழைப்பு விடுத்தனர்.  டிவிஎஸ் பள்ளியில் இரண்டு ஷிப்டுகளாக பள்ளி இயங்கி வருகிறது. இதனால் மதிய நேர பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


தொடர்ந்து பெற்றோர்களும் பதற்றத்துடன் பள்ளிகளுக்கு வந்து குழந்தைகளை அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது. மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி பேருந்துகள், மாணவர்களின் சைக்கிள்கள் வகுப்பறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் வந்து சோதனை நடத்தினர்.


இது போன்று மக்களை சிரமப்படுத்தும் வதந்திகளை கிளப்பும்  நபர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்