சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ராயப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது.
செவ்வாய்க்கிழமை கிண்டியில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னை போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்தனர். அதேபோல கடந்த வாரம் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதுவும் புரளி என தெரியவந்தது. மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அநாமதேய நபர் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை செய்தனர். நீதிமன்ற வளாகம் உடனடியாக காலி செய்யப்பட்டது.

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுவும் புரளி என பின்னர் தெரியவந்தது. "உங்கள் கட்டிடத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன - செயல்படுங்கள் அல்லது பேரழிவை சந்தியுங்கள்" என்று அந்த மின்னஞ்சலில் இருந்தது.
இந்த நிலையில் தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டை போலீசார் உடனடியாக விரைந்து வந்து மோப்ப நாய்கள் உதவியுடன் ஒவ்வொரு இடமாக சோதனையிட்டனர். அதிர்ஷ்டவசமாக வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இது ஒரு புரளி மிரட்டல் என தெரியவந்தது. போலீசார் இப்போது அந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியவரை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் இந்த வெடிகுண்டு புரளிச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதைய யார் செய்கிறார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியும் அயர்ச்சியும் தருகிறது.
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}