சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Sep 22, 2025,06:20 PM IST

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


சமீப காலமாக இந்தியா முழுவதிலும் வெடிகுண்டு மிரட்டல்கள் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு அதிகளவில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து அனைவரையும் கதிகலங்க செய்து வருகின்றது. அதுமட்டுமின்றி சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் அது புரளி என்று தெரிய வந்தது.




இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள இரண்டு இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும், வானிலை ஆய்வு மையத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரிலும் மிரட்டல் வந்துள்ளது. 


இதனையடுத்து இந்த இரு இடங்களிலும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய் உதவியுடன் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர் குழுவும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்